Skip to main content

மம்பட்டியான் நல்லவரா? கெட்டவரா? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 02

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 01

 

காவல்துறைக்கு கடும் சவாலாக விளங்கிய மம்பட்டியானின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை  ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை நமக்கு விவரிக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்கள்.

 

காட்டுப் பகுதிகளில் நடந்து செல்வதே மம்பட்டியானின் வழக்கம். காடுகளின் அமைப்பு முழுவதும் அவருக்கு அத்துப்படி. ஊர் மக்களுக்குப் பல வேளைகளில் அவர் உதவியிருக்கிறார். தன்னுடன் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அவர் கொள்ளைகளை மேற்கொண்டார். இதனால் காவல்துறையின் கோபத்திற்கு அவர் ஆளானாலும் மக்களில் பெரும்பாலானோர் அவர் மீது பயம் கலந்த அன்பு வைத்திருந்தனர். மம்பட்டியானைப் பிடிப்பதற்கு உளவாளிகள், மலபார் போலீஸ், கர்நாடக போலீஸ் என்று பலருடைய உதவியையும் தமிழ்நாடு போலீசார் நாடினர்.

 

மம்பட்டியான் குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் எழுந்த பிறகு, மம்பட்டியானை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது. மம்பட்டியானோடு இணக்கமாகச் செல்ல காவல்துறை நினைக்கவில்லை. என்கவுண்டர்கள் பலமுறை நடைபெற்றாலும் அதில் மம்பட்டியானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்பட்டியானுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். 

 

மம்பட்டியான் உண்மையில் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல முடியவில்லை. சிறு வயதில் எனக்கு அவர் ஒரு ராபின்ஹுட் போல தான் தெரிந்தார். பிற்காலத்தில் காவல்துறை அதிகாரியான பிறகு, சட்டவிரோதமாக அவர் செய்த செயல்களை அறிந்த பிறகு, அவர் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியவர் தான் என்பதை உணர்ந்தேன். தன் நண்பரின் சகோதரியான நல்லம்மாள் மீது அவர் கொண்ட காதல் தான் அவருடைய உயிருக்கு ஆபத்தாக மாறியது. அதற்கு முன்பே அந்த நண்பரின் இன்னொரு விதவை சகோதரியோடும் மம்பட்டியானுக்குத் தொடர்பு இருந்தது. அதனால் அவருடைய நண்பனே அவருக்கு எதிரியாக மாறி, காவல்துறையோடு சேர்ந்துகொண்டு இறுதியில் பாயாசத்தில் விஷம் வைத்து தான் மம்பட்டியானைக் கொல்ல முடிந்தது.

 

மம்பட்டியானின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டபோது மிகப்பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் பலர் அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து மம்பட்டியானின் உடலைப் பார்க்கச் சென்றனர். சமீபத்தில் மம்பட்டியானின் மகன் கொடுத்த பேட்டி ஒன்றைப் பார்க்க முடிந்தது. மிகவும் உடல் தளர்ந்து போயிருந்த அவருடைய பேச்சில் மம்பட்டியான் குறித்த எந்தப் பெருமிதமும் இல்லை. மம்பட்டியானால் தான் இன்னும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது என்று அவர் விரக்தியோடு பேசினார். போலீசாரின் தொந்தரவு இல்லை என்றாலும் சொந்த ஊரில் இருந்த பகை காரணமாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

 

 

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.