Skip to main content

கருப்பு பணம் வைத்திருந்தால் தண்டனை ஏன்? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 13

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

rajkumar-solla-marantha-kathai-13

 

பணமோசடி, கருப்பு பணம் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கான தண்டனைகள் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் விரிவாக விளக்குகிறார்

 

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது தான் பணமோசடி. இதைத் தடுப்பதற்கு தான் தனியாக சட்டம் இருக்கிறது. வரி செலுத்தாத பணம் அத்தனையும் கருப்பு பணம் தான். லஞ்சம் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. திருக்குறளில் கூட இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. கருப்பு பணமாக வந்த பணத்துக்கு நாம் வரி கட்டாமல் கருப்பு பணமாகவே வைத்திருக்கும்போது அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். 

 

தவணை சொல்லாமல் இலவசமாக அரசாங்கத்துக்கு வருமானம் கொடுத்து வருபவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் மட்டும்தான். இங்கு பலருக்கு பணமோசடி வழக்கு குறித்தும், வருமான வரி சட்டங்கள் குறித்தும் சரியான புரிதல் இல்லை. வரி கட்டாமலேயே இருந்தாலோ, அல்லது குறைந்த அளவில் வரி செலுத்தினாலோ நீங்கள் பணமோசடி வழக்கில் சிக்குவீர்கள். அப்படி வைத்திருக்கும் பணம் தான் கருப்புப்பணம். இப்போது சட்டத்தின் பார்வையில் நீங்கள் குற்றவாளி தான். விசாரணை தொடங்கும் முன்பே இதுபோன்ற வழக்குகளில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துவிடும். 

 

குற்றத்தை ஒப்புக்கொண்டால் அது ஒரு வகையாக டீல் செய்யப்படும். இல்லையென்றால் வழக்கு தொடுக்கப்படும். சொத்து, வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு என அனைத்தும் முடக்கப்படும். இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை. சாதாரண ரவுடிக்கும், மிகப்பெரிய இடத்தில் இருக்கும் மனிதருக்கும் சட்டம் ஒன்றுதான். போக்சோ சட்டத்தில் பல ஆசிரியர்கள் சிக்குவதை நாம் பார்க்கிறோம். குற்றத்தை செய்த பிறகு அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

 

தவறு செய்யாமல் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சட்டம் நிச்சயம் தண்டிக்கும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் கடைசியாகத்தான் விசாரணை நடைபெறும். விசாரணைக்கு அவர் ஒத்துழைத்துதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. ஜெயலலிதாவின் வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர் மறைந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சசிகலா சிறை சென்றார். செலுத்த வேண்டிய அபராதமும் செலுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கப்பலில் வந்த ஆயிரம் டன் உர மூட்டை; காணாமல் போனது எப்படி? -ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 18

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 rajkumar-solla-marantha-kathai-18

 

கப்பலையும், கப்பலில் சட்ட ரீதியாக ஏற்றி வரும் சரக்குகளையும் இன்சூரன்ஸ் செய்வது பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மிடையே விவரிக்கிறார்.

 

கப்பல் கட்டும் வரை ஒரு இன்சூரன்ஸ் இருக்கும், கப்பலை முழுவதுமாக கட்டி முடித்து அது கடலுக்குள் இறங்கிய பிறகு ஒரு இன்சூரன்ஸ் எடுத்தாக வேண்டும். அதற்கு பெயர் மரைன் ஹல் இன்சூரன்ஸ் ஆகும். கட்டுமரம், படகு போன்றவைகளுக்கும் இன்சூரன்ஸ் அளிக்கப்படும். இதில் சில தில்லுமுல்லு எல்லாம் நடக்கும். அதை விவரிக்கிறேன்.

 

தொழில் அதிபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து உரம் கொண்டு வந்து தருவதாக அரசின் டெண்டரை எடுக்கிறார். கப்பலில் சரக்கை ஏற்றும் முன் கப்பலின் எடை பரிசோதிக்கப்படும், கப்பலில் சரக்கு ஏறிய பிறகு அது நீரில் மூழ்கும் அளவை வைத்து ஒரு எடை போடப்படும், அதை வைத்துதான் சரக்கிற்கு இன்சூரன்ஸ் தொகை நியமிக்கப்படும். சென்னை துறைமுகம் வந்த சரக்கு இங்குள்ள விவசாயிகளிடம் அரசு மானியத்திற்கு விற்க இருந்த ஆயிரம் டன் உரத்தின் மூட்டைகள் காணாமல் போய்விட்டது என்று இன்சூரன்ஸ் கேட்டு விண்ணப்பித்தார்.

 

இன்சூரன்ஸ் அதிகாரிகள் மாறுவேடமிட்டு துறைமுகத்திற்குள் வேலை தேடுவது போல் சென்று விசாரித்தால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுகத்திலிருந்து வெளியேறுகிறது. என்ன ஏதுவென்று விசாரித்தால் அங்குள்ளவர்கள் “இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், கண்டுகொள்ளக்கூடாது” என்றிருக்கிறார்கள். பிறகு அங்குள்ள ரெஜிஸ்டரில் வெளியே சென்ற லாரிகளின் நம்பரை வைத்து தேடினால் அந்த தொழிலபதிபர் ஆயிரம் டன் உர மூட்டைகளை அரசின் உதவி இல்லாமல், தனியாக விவசாயிகளிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

 

இந்த உண்மையை கண்டறிய கடலூரில் பணிபுரிந்த கிரைம் இன்ஸ்பெக்டர் உதவினார். பிறகு, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இன்சூரன்சிற்காக இதுபோன்ற பெரிய அளவிலான கொள்ளை எல்லாம் நடக்கும். ஆனால், இன்சூரன்ஸ் அதிகாரிகளை அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாற்றி இன்சூரன்ஸ் தொகையை பெற்றுவிட முடியாது. 
 

 

 

Next Story

சென்னையில் பிக்பாக்கெட் தொல்லை குறைஞ்சது எப்படி தெரியுமா? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 17

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

rajkumar-solla-marantha-kathai-17

 

சென்னை என்றாலே சினிமாக்களில் பிக்பாக்கெட் அடிப்பதாக காட்டப்படுவதுண்டு; அது இப்போதெல்லாம் சுத்தமாக கிடையாது. அது எப்படி முழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டது என்பதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னை எல்லீஸ் ரோட்டில் ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் பண்ணும் நிறுவனத்திற்கான கிளை ஒன்றிற்கு பணம் நிலுவைத் தொகை கட்ட வரும் ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பணம் தொலைந்து விட்டதாகவே கூறி வந்தார்கள். ஆரம்பத்தில் எங்கேயோ தொலைத்து விட்டார்களோ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் தொடர்ச்சியாக இப்படி சொல்லப்படுவதால் என்னவென்று விசாரித்தபோது பணத்தை தொலைத்த எல்லோருடைய பை, பேண்ட், சட்டை ஆகியவற்றில் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு முடிவெடுத்தோம் தொடர்ச்சியாக பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

 

இது குறித்து விசாரித்து இதை தடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னராக அப்போது இருந்த விஜயகுமார் அவர்களிடம் பேசினேன். அவரும் செல்வமணி என்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எங்களுடைய இன்சூரன்ஸ் குழுவும் இணைந்து ஏதேதோ முயற்சிகள் செய்து தேடினோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அப்போது ஏட்டையா ஒருவர் சொன்னார். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்போதைய சென்ட்ரல் ஜெயிலில் பிக்பாக்கெட் வழக்கில் சிக்கியிருக்கிறவங்க கிட்ட கேட்டால் ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் என்றார்.

 

காவலர் ஒருவரையே கைதி போல சிறைக்குள் அனுப்பி பிக்பாக்கெட் கேசில் சிக்கியவர்களோடு பழக வைத்தோம். மகேஷ் என்றவர் அறிமுகமானார். அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி சிறை செல்பவர். அவரை நீதிபதி அனுமதியோடு மருத்துவ காரணங்களை சொல்லி சிறையிலிருந்து வெளியே எடுத்து அவரைக் கொண்டு அவருடைய பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகளைத் தேடினோம். சென்னையில் பிரபலமாக இருக்கும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிலிருந்தும் பிக்பாக்கெட் அடிக்கும் அவனின் கூட்டாளிகள் சிக்கினர்.

 

அதில் ஒருவன்தான் சொன்னான். எங்களை ஏன் சார் பிடிச்சு வச்சிருக்கீங்க... எங்க டிரைனர் இருக்காரு சார், அவரை போயி பாருங்க என்றான். வியாசர்பாடி நாகராஜன் என்பவரை தேடிப் போனபோது அவரோ வீட்டின் பின்புறம் பெரிய பயிற்சி பட்டறை வைத்திருந்திருக்கிறார். 

 

பஸ் ஸ்டாண்டில் எப்படி திருடனும், கோவிலில் எப்படி திருடனும், பையிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் போன்ற எல்லாவற்றிற்கும் செய்முறை பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரிகளை உருவாக்கி ஒரு பட்டறையே வைத்திருந்திருக்கிறார். தினமும் சென்னை மண்ட்ரோ சிலை அருகே கூடி நின்று எந்த பஸ்சில் யார் போக வேண்டும். பிக்பாக்கெட் அடிக்கும் பணத்தை எங்கே கொண்டு வந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி வேலை செய்திருக்கிறார்கள். அந்த குழுவையே ஒட்டுமொத்தமாக பிடித்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பினோம். அதன் பிறகு சென்னையில் பிக்பாக்கெட் ஒட்டுமொத்தமாக அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது.