Skip to main content

துப்பறியச் சென்ற பெண்ணிடமே அத்துமீறல்; கண்டுகொள்ளாத காதலி - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 05

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Lady Detective Yasmin  Case Explanation  04

 

தன்னுடைய துப்பறியும் அனுபவங்கள் பலவற்றையும் துப்பறிவாளர் யாஸ்மின் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தொழிலதிபர் ஒருவரும் அவருடைய மனைவியும் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தனர். அவர்களுடைய பெண் நன்கு படிக்கக் கூடியவள். படிப்பதற்காக வெளியூர் சென்ற பெண் மீண்டும் ஊருக்கு வர மறுத்தாள். தான் ஒரு பையனைக் காதலிப்பதாகவும் அவன் ஒரு மருத்துவர் என்றும் பெற்றோரிடம் கூறினாள். அவள் பிடிவாதமாக இருந்ததால் அந்தப் பையன் குறித்து விசாரித்து சொல்லுமாறு அவளுடைய பெற்றோர் என்னிடம் வந்தனர். கிளினிக் சென்று விட்டு அதன் பிறகு வீட்டுக்குச் செல்லும் சாதாரண பையனாகத் தான் அவன் தெரிந்தான். 

 

இன்னும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினோம். எங்கள் டீமில் இருந்து ஒரு பெண்ணை அவனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டோம். அவன் ரெகுலராக செல்லும் வீட்டை கவனித்தபோது அங்கு வயதானவர்கள் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அப்போது தான் தெரிந்தது அங்கு இருந்தது அவனுடைய மனைவி மற்றும் குழந்தை என்று. எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதை அந்தப் பெற்றோரிடம் தெரிவித்தோம். ஒருநாள் நாங்கள் அனுப்பிய பெண்ணிடமே அவன் தவறாக நடக்க முயன்றான். அவன் கேரக்டரும் சரியில்லை என்பது தெரிந்தது. 

 

நடந்தவற்றை அந்தப் பெண்ணிடம் சொன்னபோது அவள் நம்பவில்லை. தன்னுடைய காதலால் அவனை மாற்றி விட முடியும் என்று நம்பினாள். நாங்கள் கிளினிக்கில் வேலைக்கு அனுப்பிய பெண்ணை இந்தப் பெண்ணோடு பேச வைக்க முடிவு செய்தோம். தன்னிடம் அவன் அத்துமீறியது பற்றி அவளிடம் இந்தப் பெண் கூறினார். நடந்த அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும், உன்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இந்தப் பெண் பதில் கூறினாள். நாங்கள் அனுப்பிய பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

தாங்கள் இருவருமே தங்களுக்குப் பிடித்தவரோடு இருப்பதற்கு எப்போதும் பரஸ்பரம் சம்மதிப்போம் என்றும், இதைத் தாங்கள் தவறாக நினைத்ததில்லை என்றும் கூறினாள். அவனுக்குத் திருமணமானது கூட தனக்குத் தெரியும் என்று கூறினாள். இந்தப் பெண்ணுக்கு தலையே சுற்றியது. வெளிநாட்டு கலாச்சாரத்தில் கூட இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. இந்தியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நமக்குப் பிடித்தது போல் வாழ வேண்டும் என்று அந்தப் பெண் முடிவு செய்தாள். யார் சொன்னாலும் அவள் கேட்கவில்லை. அதன் பிறகு அவள் தனியாக ஹாஸ்டலில் வாழத் தொடங்கினாள். அவனுடைய தொடர்பும் தொடர்ந்தது. நாங்களும் மேற்கொண்டு இந்த வழக்கை தொடராமல் விட்டுவிட்டோம்.
 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்