Skip to main content

அம்மாவின் மீது சந்தேகப்பட்ட மகன்; உண்மை தெரிந்ததும் அதிர்ந்த குடும்பம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 13

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Detective Malathi's Investigation: 13

 

தன் தாய் மீது சந்தேகம் கொண்ட மகனின் வழக்கு குறித்தும் அதைத் துப்பறிந்த விதம் குறித்தும், முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் விவரிக்கிறார்.

 

திருமணமான தம்பதிகள் குறித்த வழக்குகளுக்கு மட்டும் கொஞ்சம் அதிக கால அளவை நாங்கள் எடுத்துக் கொள்வோம். இரவு நேரங்களிலும் எங்களுடைய விசாரணை நடவடிக்கைகள் தொடரும். மிடில் கிளாஸ் மக்களால் கொடுக்க முடிந்த அளவுதான் எங்களுடைய கட்டணம் இருக்கும். தன்னுடைய குடும்பத்தின் மேல் அதிக அக்கறை கொண்ட ஒரு பையனுடைய வழக்கு இது. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அந்தப் பையன் என்னிடம் வந்து தன் தாய் குறித்து விசாரிக்க வேண்டும் என்றான். 

 

அவனுடைய தந்தையை அழைத்து வர வேண்டும் என்று கூறினேன். மறுநாள் தன் தந்தையுடன் அவன் வந்தான். வசதியான குடும்பம் அது. படிக்காத பெண்ணான அவனுடைய தாய், காலையில் வெளியே கிளம்பிச் சென்று மாலை வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை அதிகமாக ஆர்டர் செய்து ஆட்டோவில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை நாம் பின்தொடர ஆரம்பித்தோம். அவர் இதற்கு முன் குடியிருந்த அவர்களின் வீடு இருந்த பகுதிக்கு தினமும் சென்றார். 

 

அங்கிருப்பவர்கள் இவரைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். அங்கு பலருக்கு இவர் உதவிகள் செய்தார். தவறான பழக்கம் எதுவும் அவருக்கு இல்லை என்பதை அறிந்தோம். பேச்சுத் துணைக்கு தன்னைச் சுற்றி ஆட்கள் வேண்டும் என்று நினைத்ததால் தான் அவர் தினமும் அங்கு சென்றார். பொருட்களை வாங்கி அங்கிருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார். 

 

இதை நாங்கள் அந்தப் பையனிடம் சொன்னோம். தனிமை தான் அவருடைய பிரச்சனை, பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால் அந்த அம்மா இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை குடும்பத்தினருக்குப் புரிய வைத்தோம். அவரது மகனுக்கும் எடுத்துச் சொன்னோம். இதெல்லாமா ஒரு பிரச்சனை என நினைத்த குடும்பத்தினர் பின்பு உளவியல் ரீதியிலான அவரது மனப் போராட்டத்தை புரிந்து கொண்டனர். மற்றவர்களிடம் அவர் ஏமாறுவது குறித்து அந்தப் பெண்ணுக்கும் புரிய வைத்தோம். அந்த மகனும், தந்தையும் புரிந்து கொண்டனர். அந்தக் குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.