Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 15

Published on 13/12/2019 | Edited on 06/01/2020


புனே பாஜக தலைவரின் நில ஊழல்!  PUNE LAND SCAM (MAHARASHTRA)

மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் பாஜக-சிவசேனா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜ் புரோஹித். 1995-1999 காலகட்டத்தில் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி, நகர்ப்புற நில கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்மூலம், நிலம் கையகப்படுத்துதலில் இருந்து புனேவுக்கு விலக்கு அளித்தார். இது 2005ல் அம்பலமானது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தனிநபர்கள் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை கைப்பற்ற அவர் உதவியிருப்பது தெரியவந்தது. 

உத்தரப்பிரதேச பாஜக அரசின் பெட்ரோல் பம்ப் ஊழல்! PETROL PUMP SCAM (UP)

 

nm



ஒரு பெட்ரோல் பம்ப்புக்காக சாலையை அகலப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் முதன்மை செயலாளர் ஷஷி பிரகாஷ் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஹர்டோய் நகரில் பெட்ரோல் பம்ப் இருக்கும் சாலை குறுகலாக இருந்ததாகவும், அதை அகலப்படுத்தும்படி உரிமையாளர் கேட்டதாகவும், அதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

ரேசனில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்!  PDS SCAM (CHHATTISGARH)

 

bn



சத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வர் ராமன் சிங் ரேசன் வினியோகத்தில் முறைகேடு செய்து 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமானது. மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியில் முறைகேடு செய்திருப்பதை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் கண்டுபிடித்தனர். ரேசன் வினியோக கழகத்தின் 36 அலுவலகங்களில் அவர்கள் நடத்திய சோதனையில் 36 ஆயிரம் கோடி ரூபாம் மீட்கப்பட்டது. இந்த ஊழலில் பாஜக அரசுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பியூஷ்கோயல் ஊழல்!  PIYUSH GOYAL SCAM

மோடி அரசில் மத்திய அமைச்சரான பியூஷ்கோயல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மையை மறைத்து மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர் வேறு நிறுவனங்களில் பங்குகளோ, பொறுப்புகளோ வகிக்கக்கூடாது. ஆனால், பியூஷ்கோயலும் அவருடைய மனைவியும் ப்ளாஷ்நெட் இன்போ சொல்யூசன்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற கம்பெனியில் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர். இந்த உண்மையை பியூஷ்கோயல் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்திருந்தார். உண்மை வெளியாகி அவர்கள் பொறுப்பிலிருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை அவர்கள் வைத்திருந்தனர். 
 

 

nb



பியூஷ் கோயலின் மனைவிக்கு 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம்! PIYUSH GOYAL-SHIRDI INDUSTRIES SCAM

அமித் ஷா மகன்  ஒரே ஆண்டில் ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்ததைப் போல, பியூஷ் கோயலின் மனைவிக்கு சொந்தமான ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்தது. பாஜகவினருக்கே சொந்தமான இந்த சாதனை அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பியூஷ் கோயலின் மனைவி சீமா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினார். அது 10 ஆண்டுகளில் 30கோடி ரூபாய் சம்பாதித்தது. அதுபோல, ராகேஷ் அகர்வால், முகேஷ் பன்சாலி என்ற பியூஷ்கோயலின் நண்பர்களுக்குச் சொந்தமான ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு பல்வேறு வங்கிகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் 650 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேள்வித்தாள் அம்பலத்தில் ஊழல்!  QUESTION PAPER LEAK SCAM

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான சிஜிஎல் தேர்வுக்கான எஸ்எஸ்சி கேள்வித்தாள்களும் அதற்குரிய விடைத்தாள்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். வேலைவாய்ப்பில் மோசடி செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பாக மோடி அரசு ஒரு வார்த்தைகூட விளக்கம் அளிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தால் அந்த பிரச்சனை காணாமல் போகும் என்ற மோடி அரசின் செயல்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணமாக ஆனது.
 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.