Skip to main content

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றி;  இந்த வெற்றி ஏன் இன்னும் ஸ்பெஷல் ஆனது?..

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
team india

 

 

இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்தமுறை பெற்ற வெற்றி சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த வெற்றி திரும்ப திரும்ப பேசப்பட்டுக்கொண்டே இருக்கப்போகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைவிட, இரண்டாவது டெஸ்ட் தொடர் வெற்றி ஸ்பெஷலாக அமைந்துள்ளது. அதற்கான காரணங்கள்:

 

ஆஸ்திரேலியாவில் இந்தியா முதல்முறை டெஸ்ட் தொடரை வென்ற போது பரவலாக வைக்கப்பட்ட விமர்சனம், முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லை என்பது. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் இருக்கும்போதே தொடரை வென்று பதிலடி அளித்துள்ளது இந்திய அணி. ஸ்மித், வார்னர் யார் இருந்தாலும் இந்திய அணியால் வெல்லமுடியும் என்பதை செய்து காட்டியிருக்கிறார்கள் நமது வீரர்கள். 

 

விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில்தான் ஆடுவர் என்பது தெரிந்ததுமே, இந்திய அணி தொடரை வெல்வது அல்ல சமன் செய்வதே பெரிய விஷயம் என கருதப்பட்டது. முதல் டெஸ்டில் தோற்றதுமே இந்தியா 4-0 என தோற்கும் என முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் அடித்து சொன்னார்கள். ஆனால் விராட் கோலி இல்லாமலே தொடரை வென்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறது நமது இந்திய அணி. ஆஸ்திரேலியாவின் மைன்ட் கேம்களுக்கு நமது ஆட்டத்தின் மூலமாகவே பதிலளித்திருக்கிறோம்.

 

இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர் இஷாந்த் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகல் என்ற பின்னடைவோடு, ஆஸ்திரேலியாவிற்கு வந்த இந்திய அணிக்கு ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் காயங்கள் அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்தன. இருப்பினும் இந்தியா பின்வாங்கவில்லை. காயங்களுடன் போராடிக்கொண்டே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறோம். மூன்றாவது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் காயத்தோடு ஆடி இந்திய அணியை கரை சேர்த்து விதம், அணியினுடைய, அணி வீரர்களுடைய போராட்ட குணத்திற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு. அந்த போராட்டக் குணம் இல்லை என்றால் ஆஸ்திரேலியாவினை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது என்றும் எட்டாக்கனிதான். இறுதி டெஸ்ட் போட்டியில் பும்ராவும் இல்லாமல், அனுபவமற்ற பந்து வீச்சாளர்களை வைத்தே போட்டியை வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

rishabh pant

 

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா ஒரு சாதனையை நிகழ்த்தியது. ஆனால் மிகவும் மோசமான சாதனை. 36/9 - இந்திய அணி ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள். இந்த சாதனையோடுதான் இந்தியா தொடரை ஆரம்பித்தது. தொடருக்கு இப்படி ஒரு தொடக்கம் என்றால் அது எந்த வீரரையும், அணியையும் கலங்கடித்து விடும். அதனையும் தாண்டி வந்து நமது வீரர்கள் சரித்திரம் படைத்தது இருக்கிறார்கள். 36 ரன்களில் இன்னிங்ஸ் முடிவடைந்தபோது, விராட் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தை இழந்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பிறகு மொத்த தொடரிலும், பெரும்பாலான நேரங்களில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியாவில், இன்னொரு அணி தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்துவது என்பதே ஒரு சாதனைதான்.

 

இவற்றையெல்லாம் தாண்டி, இந்த தொடர்வெற்றியை கொண்டாட மிகமுக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அதனை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியிலேயே தெரிவித்துள்ளார். இந்த தொடரின் ஒவ்வொரு செஸ்ஸனிலும் (session)  ஒரு ஹீரோ கிடைத்ததாக சச்சின் குறிப்பிட்டிருக்கிறார். அது 100 சதவீதம் உண்மை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அணிக்கும், இந்த தொடரில் ஆடிய அணிக்கும் அதுதான் பெரும் வித்தியாசம். அதுதான் இந்த வெற்றியை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியிருக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் ஆடிய இந்திய அணிகள் `ஒன்று இரண்டு வீரர்கள் மட்டுமே அணியை தூக்கி நிறுத்துவார்கள் ஆனால் இந்தமுறை கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே வெற்றிக்கான தூண்களாய் அமைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு செஸ்ஸனிலும் ஒரு வீரர் அணிக்காக போராடினார். தொடர் முழுவதும் நிதான ஆட்டத்தால் புஜாரா ஆஸ்திரேலியாவை திண்டாடவைத்தாரென்றால், இரண்டாவது டெஸ்டில் ரஹானே, பும்ரா மூன்றாவது டெஸ்டில் பந்த், அஸ்வின், விஹாரி, கடைசி டெஸ்டில் கில், சிராஜ், ஷார்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், பந்த் என முக்கியமான கட்டத்தில், முன்னணி வீரர்கள் மட்டுமின்றி அறிமுக வீரர்கள், அனுமபவமில்லா வீரர்கள் என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடர் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி இரண்டாம் ஹீரோக்களாக ஜடேஜா, நடராஜன், ரோகித் என அனைவரும் வெற்றிக்கு பங்களித்திருக்கிறார்கள். இதுதான் இந்த வெற்றியை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கதாக மாற்றியிருக்கிறது. 

 

 

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்   

Next Story

கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ரோஹித்; அதிரடியாக ஆடி வரும் இந்திய அணி!

Published on 08/03/2024 | Edited on 09/03/2024
Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர். ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களைப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும் மற்றும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக இது 4 ஆவது சதமாகும். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் எனும் இந்திய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார்.ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் இணை அதிரடியாக ஆடி வருகிறது. தற்போது இந்திய அணி 72 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 7 பவுண்டரிகளுடன் படிக்கல் 31 ரன்களுடனும், சர்பிராஸ் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்