Skip to main content

மின்னல் தாக்கி இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

lightning

 

 

மின்னல் தாக்கி இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்கள் பலியான துயர சம்பவம் ஒன்று வங்காளதேசத்தில் நடந்துள்ளது. 

 

வங்காளதேசத்தில் இடி, மின்னல் தாக்கி மக்கள் பலியாகும் சம்பவம் 2016-ம் ஆண்டு முதல் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையேயான பருவ காலங்களில் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் தற்போது மிசானுர் ரஹ்மான் மற்றும் முகமது நதீம் என்ற இரு இளம் வீரர்கள் மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கும்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த மைதானத்தில் இவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட மழையினையடுத்து பயிற்சி தடைபட்டுள்ளது. அதனால் அவர்கள் கால்பந்து விளையாட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

 

அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "திடீரென அனைத்தும் நடந்துவிட்டது. மின்னல் தாக்கியதை பார்த்து அதிர்ச்சியுடன் அங்கு ஓடினோம், மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றோம். அதில் இருவர் இறந்துவிட்டனர்" என்றார்.

 

இந்த ஆண்டு மட்டும் வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்த பட்சம் 350 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.