Skip to main content

அறிகுறி இல்லை... ஆனால் கரோனா... பிரபல கால்பந்து வீரருக்காகப் பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Ronaldinho

 

பிரபல முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ரொனால்டினோ பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் ஆவார். தற்போது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "பெலோ ஹரிஸாண்டியில் உள்ள விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. தற்போது நலமுடன் உள்ளேன்" எனப் பேசியுள்ளார். 

 

ரொனால்டினோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

 

 

Next Story

போலி பாஸ்போர்ட் வைத்து பயணித்ததாக கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது..?

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

பிரேசிலின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ தவறான ஆவணங்களைப் பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

rr

 

 

புதன்கிழமை இரவு ரொனால்டினோவும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போலி பாஸ்போர்ட் தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொனால்டினோ சர்ச்சையில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டில், அவரும் அவரது சகோதரரும் பாதுகாக்கப்பட்ட ஏரியில் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மீன்பிடி வலையைக் கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி'ஓர் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.