Skip to main content

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நியூசி. ஜாம்பவான் ராஸ் டெய்லர்!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

ross taylor

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துவுடனான 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற போவதாக அவர் கூறியுள்ளார்.

 

ராஸ் டெய்லர் கடந்த 2006 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என கிரிக்கெட்டின் மூன்று விதமாக வடிவங்களிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் ராஸ் டெய்லர் ஆவர். நியூஸிலாந்துக்காக அதிக சர்வதேச போட்டிகளில் (445) ஆடியவரும், நியூஸிலாந்துக்காக அதிக சர்வதேச ரன்களை குவித்தவரும் (18074) ராஸ் டெய்லர் தான்.

 

நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் (8,581), நியூசிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்தவர் (7,584), நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சதங்களை அடித்தவர் (21), ஆஸ்திரேலியாவில் ஒரே டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த வெளிநாட்டு வீரர் (290) ஆகிய பெருமைகளையும் ராஸ் டெய்லர் தன்னகத்தே வைத்துள்ளார்.

 

 

Next Story

அரையிறுதிக்கு இதுதான் வழி; பாகிஸ்தான் காட்டிய அதிரடி!

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Pakistan vs new zealand world cup cricket score update

 

உலகக் கோப்பையின் 35 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. 

 

இதில் அதிகபட்சமாக ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 108 ரன்களை குவித்தார். அதே போல், வில்லயம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 95 ரன்களை எடுத்து அவுட்டானார். இதில்  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

 

அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஷமான் சதமதித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 106 ரன்களுடனும், பாபர் அசாம் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 47 ரன்களுடனும் ஆடிய நிலையில், 21.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை நின்றதால் 6.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக சதம் அடித்த ஷமான் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

 

 

 

Next Story

உலகக் கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

389 runs target for New Zealand in World Cup Cricket

 

உலகக் கோப்பையின் 27வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் இன்று (28-10-23) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்தது. 

 

அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் பார்ட்னர்சிப் அமைத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த வகையில், டேவிட் வார்னர் 65 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்து 81 ரன்களை குவித்தார். அதே போல், ட்ராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடித்து 109 ரன்களை குவித்தார். 

 

ஆஸ்திரேலியா அணி 19.1 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்திருந்த போது, டேவிட் வார்னர் முதல் அவுட்டானார். அதை தொடர்ந்து, களமிறங்கிய மிட்செல் மார்ஷ், க்ளென் மாக்ஸ்வெல் என 50க்கும் குறைவான ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்த போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.2 ஓவர்களில் 388 ரன்களை எடுத்திருந்தது. 

 

இதன் மூலம், நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வீசிய பந்து வீச்சில் நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் மற்றும் ட்ரெண்ட் பவுல்ட் ஆகிய இரு வீரர்களும் தலா 3 விக்கெட்டைகளை எடுத்திருந்தனர். அதே போல், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மேட் ஹென்ரி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தும் ஆட்டத்தை முடித்தனர். அதனை  தொடர்ந்து, நியூசிலாந்து அணி 389 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.