Skip to main content

பரபரப்பான ஆட்டத்தில் வெளிச்சமின்மையால் தப்பியது நியூசிலாந்து!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

india vs newzealand

 

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் முதல் இன்னிங்சில்  345 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய வீரர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தார். கில் மற்றும் ஜடேஜா இருவரும் அரை சதமடித்தனர்.

 

இதனைத்தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி,  296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர்.  தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

 

இதனால் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் அதிர்ச்சி தொடக்கமாக வில் யங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த  டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் நிலைத்து நின்று நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 79 ஆக உயரந்தபோது  வில்லியம் சோமர்வில்லே 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

இதனைத்தொடர்ந்து லாதமும், கேப்டன் கேன் வில்லியம்சனும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்த லாதம் அணியின் எண்ணிக்கை 118 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், 112 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சன், டாம் ப்ளண்டெல் ஆகியோர் குறுகிய இடைவெளியில் அடுத்ததடுத்து ஆட்டமிழந்தனர்.

 

இதனால் இந்திய அணி வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஜேமிசன் நிலைத்து நின்று ஆட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.  இந்தச்சூழலில் ஜேமிசன் 30 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்களை  எடுத்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சௌதியும் ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி வெற்றி உறுதி எனவே கருதப்பட்டது.

 

இருப்பினும் 10வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரச்சின் ரவீந்திராவும், அஜாஸ் படேலும் கடைசி வரை விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. அதேநேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக போட்டி ட்ராவில் முடிந்தது. ரச்சின் ரவீந்திராவும் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தும், அஜாஸ் படே 23 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் தங்கள் அணியை கரை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

விராட் கோலியின் பயோபிக்; பிரபல நடிகர் விருப்பம்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Vijay Deverakonda expressed interest acting Virat Kohli's biopic

 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை வைத்து 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி',  என்ற பெயரில் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் எப்போது உருவாக்கப்படும் என ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை பார்க்க விஜய் தேவரகொண்டா, ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம்  எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, “தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஆனால் அதில் சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால் விரைவில் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.