இந்தியமற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான முதலாவதுஇருபது ஓவர்போட்டி நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் ஜடேஜாமற்றும் கே.எல்.ராகுலின்சிறப்பானஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இப்போட்டியின்போது, ஜடேஜாவின் தலையில்பந்து தாக்கியது. மேலும் அவருக்குதசைபிடிப்பும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜடேஜாவுக்கு மாற்றாகசஹால்களமிறங்கினார்.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ வெளியிட்டசெய்திக்குறிப்பில், போட்டிக்குஇடையேஇந்தியமருத்துவர்கள் நடத்தியபரிசோதனையில், ஜடேஜாவிற்குதலையில்காயம்ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.ஜடேஜாதொடர் கண்காணிப்பில் இருப்பார், சனிக்கிழமை (இன்று) மீண்டும் பரிசோதனை நடத்தப்படும்.அப்போது தேவைப்பட்டால்அவருக்குகூடுதல்ஸ்கேன்களும் செய்யப்படும் எனதெரிவித்துள்ளது.
மேலும், காயம்மற்றும் தசைப்பிடிப்புகாரணமாகஜடேஜா, தற்போது நடைபெற்றுவரும்20 ஓவர்போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், அவருக்குபதிலாக வேகப்பந்து வீச்சாளர்ஷார்துல்தாக்குர்அணியில்சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பி.சி.சி.ஐ. அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.