Skip to main content

டக் அவுட்டான ராகுல்...நிதானத்துடன் பிரித்விஷா....

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
prithvi


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸில் வெற்றிபெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் ஆடுவதாக தேர்வு செய்தார். இந்த போட்டியில் அறிமுக வீரரான பிரித்விஷா விளையாடுகிறார்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுலும், பிரித்விஷாவும் களம் இறங்கினர். முதல் ஒவரிலேயே கே.எல். ராகுல் கேப்ரியல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரத் தொடர்ந்து புஜாராவும், பிரித்விஷாவும் விளையாடி வருகின்றனர்.