Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021
ு

 

2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்தியா அடுத்த பதக்கத்திற்காக காத்து இருக்கும் நிலையில், மற்ற போட்டியிகளில் வெற்றிபெற்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறார்கள். இந்நிலையில், ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவுடன் வரும் 29ம் தேதி மோத உள்ளது.


 

Next Story

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பரிசுத்தொகை; தமிழக  அரசு அறிவிப்பு 

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

5 lakh each for Indian hockey players Tamil Nadu Government Notification

 

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்று வந்த  நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் நான்காவது முறையாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா, இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது. 9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.

 

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில், மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில்,  இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோப்பையை வழங்கி, வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து, வாழ்த்தினார். மேலும், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்ச ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 1 கோடியே 10 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

ஆசிய ஹாக்கி போட்டி-வாகை சூடியது 'இந்தியா'

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

 Asia Hockey Tournament-india won

 

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலபரிச்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா தற்போது 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் நான்காவது முறையாக ஆசிய ஹாக்கி கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

 

30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது.  9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.