Skip to main content

ஹிட்மேன் ரோஹித்தின் மும்பையா? தல தோனியின் சிஎஸ்கே-வா?

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

சர்வதேச போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் போல, ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டி தொடங்கும் முன்பே முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள், ரசிகர்கள் என பல தரப்பிலும் காரசார விவாதங்களும், ஆதரவுகளும் அனல் பறக்கும். 

 

csk

 

சென்னையை அதிக முறை வென்ற ஒரே அணி மும்பை மட்டுமே. இதுவரை 27 போட்டிகள் விளையாடி மும்பை அணி 15 போட்டிகளில் வெற்றியும், சென்னை அணி 12 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. சென்னை அணி மும்பை அணியுடன் மட்டுமே குறைவான வெற்றிகள் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர்களில் மட்டுமல்ல; டி20 வரலாற்றில் உலகளவில் பல சாதனைகளை கொண்டுள்ளதும் இந்த இரு அணிகள்தான்.  
 

சென்னை அணி தன்னுடைய வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே 100 ரன்களுக்கு குறைவாக எடுத்துள்ளது. 2013-ல் 79 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வீழ்ந்தது. இந்த வருடம் சென்னை-மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் 171 ரன்களை சேஸ் செய்த சென்னை அணி வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
 

ஐபிஎல்லில் மிகச்சிறந்த அணியாக வலம் வருவது சென்னை அணி. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சற்று கடுமையாகவே போராட வேண்டியிருக்கிறது. கடும் சவால்களை கொடுக்கிறது மும்பை. மேலும், இரு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சென்னை அணி மும்பையிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளது.
 

சர்மா தலைமையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் 56 போட்டியில் வெற்றி, 57.65 சதவீதம் வெற்றி. தோனி தலைமையில் 169 போட்டிகளில் 102 போட்டியில் வெற்றி, 60.71 சதவீதம் வெற்றி. சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையும், இரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் வென்றுள்ளது. 

   
பெரும்பாலும் ஸ்லொவ் ஸ்டார்ட் அணியாக வலம்வரும் மும்பை அணி, இந்த ஆண்டு சிறப்பான ஒரு தொடக்கத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. முதல் 10 போட்டிகளில் 6 வெற்றி பெற்று ஃப்ளேஆப் வாய்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஃப்ளேஆப் சென்று விட்டது சென்னை அணி. 
 

சென்னை அணி மும்பை அணியுடன் சேப்பாக் மைதானத்தில் 6 போட்டிகளில் 2 போட்டியில் சென்னை அணியும், 4 போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் சேப்பாக் மைதானத்தில் சென்னை அணி தோல்வியை கண்டதில்லை என்பது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். 
 

கடைசி போட்டியில் ஆடுகளம் ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. பெரும்பாலும் சேப்பாக் மைதானம் ஸ்பின் பவுலிங்க்கு சாதகமாகவே இருந்து வருகிறது. கடைசியாக நடந்த சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் 175+ ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சென்னை அணிக்கு வலுவான ஸ்பின் பவுலிங் யூனிட் இருப்பது சென்னை மைதானத்தில் மும்பை அணிக்கு சற்று சவாலான ஒன்றுதான். மும்பை அணியில் ராகுல் சஹார் தவிர சிறந்த ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது மும்பைக்கு மைனஸ்.  
 

சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்சன் மற்றும் டுபிளெஸிஸ் ஜோடி நல்ல தொடக்கத்தை தரவேண்டியது சென்னைக்கு மிகவும் அவசியம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபார்முக்கு திரும்பியுள்ளார் வாட்சன். 

 

watson

 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரெய்னா, ராயுடு, ஜாதவ் ஆகியோர் பெரியளவு ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இருந்த போதிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகின்றனர். தோனி சிறந்த ஃபார்மில் அணிக்கு ஃபினிஷராகவும், இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார்.  
 

ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அணியின் தேவைக்கு ஏற்றவாறு விளையாடி வருகின்றனர். டெத் ஓவர்களில் பிராவோ மிரட்டலாக பந்துவீசி வருகிறார். 
 

தீபக் சஹார், ஹர்பஜன் சிங் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகின்றனர். அதே போல இம்ரான் தாஹிர் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறார். 
 

ரோஹித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர். டி காக் இந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை மும்பை அணிக்கு அளித்து வருகிறார்.  
 

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், போலார்ட், குருணல் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் ஓரளவு விளையாடி வருகின்றனர். ஹார்திக் பாண்டியா ஃபினிசிங்கில் கலக்கி வருகிறார்.   
 

pollard

 

ராகுல் சாஹர், ஜாஸ்ப்ரிட் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை அணி மும்பையில் அடைந்த தோல்வியை சரி செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 
 

சென்னை அணியின் பலம்:

 
சிறப்பான ஸ்பின் பவுலிங் யூனிட், பிராவோவின் அசத்தல் டெத் பவுலிங், பவர் ப்ளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவில் சிறந்த பவுலர்கள் என பந்துவீச்சில் சென்னை அணி கலக்கி வருகிறது. அதேபோல டுபிளெஸிஸ், பிராவோ, ஜடேஜாவின் ஃபீல்டிங், தோனியின் ஃபினிசிங் என சென்னை அணியின் பலம் உள்ளது. 

 

பலவீனம்:
 

பிராவோவை தவிர வேறு சிறந்த டெத் பவுலர்கள் இல்லாதது, மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆகியவை சென்னை அணிக்கு சற்று பலவீனமாக அமைந்துள்ளது. 

 

மும்பை அணியின் பலம்:
 

சிறப்பான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட், நல்ல ஒப்பன்னிங் ஜோடி, சிறந்த ஹிட்டர்கள் என மும்பை அணி பலமாக உள்ளது. 
 

பலவீனம்:

 

அதேசமயம் பலமான  ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது, குருணல் பாண்டியா ஃபார்ம் இல்லாமல் தவிப்பது, மிடில் ஓவர்களில் பேட்டிங்கில் குறைவான ரன் ரேட்டில் விளையாடுவது என மும்பை அணிக்கு சரிசெய்ய வேண்டிய பிரச்சனைகள் உண்டு.    
    


உத்தேச அணி:
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 
 

வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், ரெய்னா, ராயுடு, ஜாதவ், டோனி, பிராவோ,  ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

 

மும்பை இந்தியன்ஸ் அணி: 
 

டி காக், சர்மா, சூர்யகுமார் யாதவ், போலார்ட், குருணல் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், இஷான் கிஷன், மயான்க் மார்க்கண்டே, ராகுல் சாஹர், பும்ரா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், பென் கட்டிங், மலிங்கா.    

  

 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.