Skip to main content

விராட் கோலி செய்த தவறு இதுதான் - கவுதம் காம்பீர் பேச்சு!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

gautam gambhir

 

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டி, நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 132 ரன்களைக் குவித்தார். பெங்களூரு அணி சார்பில் ஷிவம் டுபே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தது. 17-வது ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

 

முன்னதாக கே.எல்.ராகுல் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி தவறவிட்டார். கே.எல்.ராகுல் கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், பஞ்சாப் அணியின் ரன் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர், இப்போட்டியில் விராட் கோலி செய்த தவறுகள் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில், "ஷிவம் டுபே இரண்டு ஓவர் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுத்தது தவறில்லை. அதை இறுதி ஓவரின் போது கொடுத்தது தான் தவறு. அதை ஸ்டெயின் அல்லது நவ்தீப் சைனியிடம் கொடுத்திருக்க வேண்டும். நவ்தீப் சைனி 17-வது ஓவரின் போதே பந்துவீசி முடித்துவிட்டார். இவையெல்லாம் தவறான கணக்கீடாக அமைந்தது. கே.எல்.ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தால் அணியின் ரன்கள் 185-க்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அதன்மூலம் அவர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடியிருக்க முடியும். 20 ஓவர் போட்டியில் செய்யும் சிறிய தவறு எவ்வளவு பெரிய முடிவைத் தரும் என்பதற்கு இது உதாரணம்" எனக் கூறினார்.

 

 

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

கவுதம் கம்பீருக்கு கரோனா!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

gautam gambHir

 

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு, தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும்  கரோனா உறுதியாகியுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கம்பீர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.