Skip to main content

தோனியும் கோலியும் இந்த ஒரு விஷயத்தில் வித்தியாசமானவர்கள்... கவுதம் காம்பீர் பேச்சு!!!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

gambhir

 

தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் போட்டிகளுக்கான தலைமைப் பண்பு குறித்து கவுதம் காம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

13- ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் அணித் தேர்வு மற்றும் தலைமைப்பண்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "தோனி மற்றும் விராட் கோலியின் தலைமைப் பண்பில் நிறைய வித்தியாசம் உள்ளது. தோனி முதல் ஏழு போட்டிகளில் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யமாட்டார். விராட் கோலியைப் பொறுத்தவரை இது நேர்மாறாக இருக்கும். முதல் சில போட்டிகளிலேயே பெங்களூரு அணியில் மாற்றம் செய்துவிடுவார். இதனால் அணியால் நிலை பெற முடிவதில்லை. முதல் சில போட்டிகளில் சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, அதே அணியோடு விராட் கோலி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். முதல் சில போட்டிகளிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பெங்களூரு அணி வீரர்கள் விளையாடும் விதமும், தொடர்ச்சியான வாய்ப்பும்தான் அவர்களைச் சிறந்த அணியாக்கும்" என்றார்.   

 

 

Next Story

இந்தியா வாங்க, மனநல மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன்- சீண்டிய அப்ரிடிக்கு பதிலடி கொடுத்த கம்பிர்...

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறிய சர்ச்சை கருத்துக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து 'தி கேம்சேஞ்சர்' எனும் புத்தகம் எழுதி வெளியிட்டார்.

 

gambhir response to shahid afridi

 

 

அதில் இந்தியாவின் கம்பீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். அந்த புத்தகத்தில் "கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. எந்தவிதமான ஆளுமைத் திறனும் இல்லாத கம்பீர் கிரிக்கெட்டில் ஒரு சாதாரண வீரர். எந்தவிதமான ரெக்கார்டும், குறிப்பிட்ட சாதனையும் அவருக்குக் கிடையாது. ஆனால், திமிருடன் நடந்து கொள்வார். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலவையில் உருவாகியவன் என்ற நினைப்போடுதான் கம்பீரின் செயல்பாடு இருக்கும். கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை போட்டியில்நானும் கம்பீரும் மோதிக்கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் கம்பீர் முதல் ரன்னை ஓடிவிட்டு, 2-வது ரன்னுக்கு என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டோம்" என  தெரிவித்திருந்தார்.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், "ஷாகித் அப்ரிடி. நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்தியாவுக்கு வாருங்கள், தனிப்பட்ட முறையில் நானே உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

கம்பீர் மீது கிரிமினல் புகார்.. டெல்லி அரசியலில் பரபரப்பு...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளருமான கம்பீர் மீது கிரிமினல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

criminal case filed against gambhir

 

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கம்பீர் மீது ஆம் ஆத்மீ கட்சியின் டெல்லி கிழக்கு வேட்பாளரும், அக்கட்சியின் முக்கிய தலைவருமான அடிஷி மார்லேனா கிரிமினல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

ஏற்கனவே கம்பீர் இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார் என சர்ச்சையான நிலையில் தற்போது இது குறித்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.