Skip to main content

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

the first Indian cricketer to make his international debut across all three formats during the same tour

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. எனவே, இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. 

 

இந்திய வீரர்களின் அடுத்தடுத்த காயங்கள் காரணமாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு தமிழக வீரர் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்தது. ஆட்டத்தின் முதல் தினமான இன்று நடராஜன், சுந்தர் என இருவருமே சிறப்பாகப் பந்துவீசி இந்திய ரசிகர்களிடம் அப்லாஸ்க்களை அள்ளினர். இதில் தமிழக வீரர் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

 

இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது போட்டியிலேயே முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ள நடராஜன் மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே சுற்றுப்பயணத்தின் போது மூன்று விதமான ஃபார்மெட்களிலும் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனைதான் அது. ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக சென்ற நடராஜன், மூன்று ஃபார்மெட்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரையும் வியப்படையவைத்துள்ளார் என்றால் மிகையாகாது. 

 

 

Next Story

WTC: மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு; முன்னிலையில் ஆஸ்திரேலியா

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

WTC: Third day's play ends; In the presence of Aussie

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்டீவென் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 123 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக லபுசேன் 41 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

WTC: எடுபடாத இந்திய பந்துவீச்சு; ஒருநாள் போட்டியாக்கிய ட்ராவிஸ் ஹெட்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

WTC; Indian bowling not taken; Travis Head who played ODIs

 

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அஷ்வின் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ப்ளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரு நாட்டு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 3.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆஸி அணி 71 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது 43 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். சிறிது நேரத்தில் லபுசானேவும் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆஸி அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 

பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ட்ராவிஸ் ஹெட் ஒரு நாள் ஆட்டம் போல் ஆடி வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ், ஷர்துல் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.