Skip to main content

பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்ற நட்சத்திர வீரர்கள்...

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

தனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக்.
 

yuvi

 

 

“யுவராஜ் சிங்குக்கு கண்டிப்பாக பிரிவு உபசார போட்டி நடத்தியிருக்க வேண்டும்” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கிற்கு முன்பும் நாட்டிற்காக பல ஆண்டு காலம் விளையாடிய உலகின் பல நட்சத்திர வீரர்கள் பல விதமான காரணங்களால் பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்றுள்ளது அவர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு வடுவாக இருந்து கொண்டே இருக்கும். சிலர் இது தான் கடைசி போட்டி என்பதை அறியாமலேயே அந்த போட்டியை விளையாடி விட்டு பின்னர் ஓய்வை அறிவித்தனர்.
 

ராகுல் டிராவிட்:
விளையாடும் காலத்தில் இவரது அருமை பெரிதாக போற்றப்படவில்லை. என்றும் இந்திய கிரிக்கெட்டின் தியாக உள்ளம் இவர் தான். லக்ஸ்மன், டிராவிட் இருவருக்கும் 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனான போட்டி தான் கடைசி போட்டி. தனது ஓய்வை அதே ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.
 

வீரேந்திர சேவாக்:
தனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக். தனது பிறந்தநாளான அக்டோபர் 20, 2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். 
 

கவுதம் கம்பீர்:
இந்தியா வென்ற 2007, 2011 என இரு உலகக்கோப்பை தொடரிலும் அணிக்கு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அணியில் சரியாக இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடினார். பின்னர் டிசம்பர் 3, 2018-ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.  
 

வி.வி.எஸ். லக்ஸ்மன்:
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த ஆகச்சிறந்த வீரர். கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு விளையாடினார். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வை அறிவித்தார். 
 

ஜாகிர் கான்:
லென்த், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், யார்க்கர் என பேட்ஸ்மேன்களை திணறடித்த இந்தியா உருவாக்கிய சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பின்னர் 2015-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 
 

டுவைன் பிராவோ:
உலகில் எல்லா நாடுகளிலும் நடைபெறும் டி20 தொடரில் இவர் தான் ஹீரோ. தனது டான்ஸ் மூலம் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி டி20 போட்டியில் விளையாடினார். பின்னர் அக்டோபர், 2018-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். 
 

முஹம்மது அசாருதீன்:
இந்திய அணிக்கு கேப்டனாகவும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்தவர். மேட்ச் பிக்ஸிங் காரணமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2000-ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பெங்களூரில் விளையாடினார். 
 

ஏ பி டி வில்லியர்ஸ்:
 

abd

 

 

உலகம் முழுவதும் தனது அதிரடி பேட்டிங், மாஸ் பீல்டிங், புன்னகை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஏபிடி. சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே மே, 2018-ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். கடைசி போட்டியாக மார்ச், 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். 
 

சுனில் கவாஸ்கர்:
80-களில் சூப்பர்ஸ்டாராக இருந்த கவாஸ்கர் பேட்டிங் மூலம் உலக நாடுகள் அனைத்திலும் கொடிகட்டி பறந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1987-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார். 
 

மார்க் வாக்:
ஆஸ்திரேலியா அணியில் மிடில் ஆர்டர், ஓப்பனிங் என பேட்டிங்கில் கலக்கி வந்தார். 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். கடைசி போட்டியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர், 2002-ஆம் ஆண்டு விளையாடினார். 
 

ஜவகல் ஸ்ரீநாத்:
கபில் தேவிற்கு பிறகு ஸ்ரீநாத் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கினார். 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு தனது ஓய்வை அறிவித்தார். 
 

மார்க் பௌச்சர்:
தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பௌச்சர் ஜூலை, 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் கீப்பிங் செய்யும் போது பைல்ஸ் பட்டு இடது கண் பாதிக்கப்பட்டது. அப்போதே தனது ஓய்வை அறிவித்தார். கடைசி போட்டியாக ஜனவரி, 2012-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.     
 

ஷிவ்நாரன் சந்தர்பால்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 21 ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் அணிக்கு தூணாக இருந்தவர். அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கட்டாயப்படுத்தி 2016-ஆம் ஆண்டு இவரை ஓய்வு பெற வைத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார். 
 

வக்கார் யூனிஸ்:
2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் 2004-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.  
 

கெவின் பீட்டர்சன்:
இங்கிலாந்து அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பீட்டர்சன் 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 
 

மைக்கேல் வாகன்:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன் கடைசி போட்டியை 2008-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். பின்னர் அணியில் இடம் பெறாமல் தனது ஓய்வு முடிவை ஜூன், 2009-ஆம் ஆண்டு அறிவித்தார். 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.