Skip to main content

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

ROYAL CHALLENGERS BANGALORE

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாறினர். அதன்தொடர்சியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது.

 

இந்தநிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல்லை நியமிப்பதா அல்லது டு பிளெசிஸை நியமிப்பதா என ஆலோசிக்கப்பட்ட நிலையில்,  மேக்ஸ்வெல் தனது திருமணத்தின் காரணமாக ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதால் டு பிளெசிஸையே அணியின் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஐபிஎல் இறுதி போட்டியில் ஏ.ஆர் ரஹ்மான் !

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

80 years of Indian cricket journey ; AR Rahman in the IPL final 2022

 

ஐபிஎல் 2022, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி நாளை (29.05.2022) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். மேலும் அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படத்தின் ட்ரைலர் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது. 

 

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என முன்னரே அறிவிப்பு வந்தது. இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 80 வருடமாக பயணிக்கும் இந்திய கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் கலை நிகழ்ச்சிகள் மட்டும் 45 நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.       

 

 

Next Story

ஐ.பி.எல் இறுதி போட்டியில் அமீர்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

aamir khan lal singh chaddha movie trailer release IPL final

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ஐ.பி.எல் இறுதி போட்டியில் வெளியிடப்படவுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர் வெளியிடப்படவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக  ஒளிபரப்புகிறது. உலக வரலாற்றிலேயே இதுவரை எந்த படத்தின் ட்ரைலரும்  இது போன்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் வெளியாகாத நிலையில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனால் அமீர்கானின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளன.