Skip to main content

சென்னை அணி வீரருக்கு மீண்டும் கரோனா உறுதி...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

csk players

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம்  தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதுகிறது. அதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக உள்ளனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இத்தொடர் நடைபெறுவதால் பிசிசிஐ கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருக்கிறது. அதன்படி அமீரகம் சென்றடைந்த வீரர்கள் அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த முதற்கட்ட பரிசோதனையில் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்துவீச்சாளார், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து இவ்வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் சென்னை அணியால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. பிற வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் மற்ற வீரர்களைக் கொண்டு சென்னை அணி பயிற்சியில் இறங்கியது. 

 

முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தீபக் சஹாருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது. பின் பிசிசிஐ அனுமதியுடன் அவர் சென்னை அணி வீரர்களுடனான பயிற்சியில் கலந்து கொண்டார். தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மற்றொரு இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்தது அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

 

 

Next Story

'பிரகாசமான பிளே ஆப்'-சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
'Brilliant play-off'-Chennai Super Kings' stunning win

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டி இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியது.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரகாசமாகி உள்ளது. பெங்களூர், டெல்லி, லக்னோ போன்ற அணிகளின் ரன்களின் ரேட்டை விட சிஎஸ்கே வின் ரன் ரேட் பெரிய அளவில் உயரும். முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் அணி இதில் 141 ரன்கள் எடுத்திருந்தது, 142 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் 18.2 ஓவரில் 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

Next Story

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த சி.எஸ்.கே!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
CSK kept the fans in suspense

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (12.05.2024) நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டிக்குச் செல்ல சென்னை அணிக்கு இந்த இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று ஆகும். இதனால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை ஸ்டேடியத்தில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இன்றைய போட்டி முடிந்ததும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பை தோணி அறிவிக்க வாய்ப்பு இருபதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  அதே சமயத்தில் சென்னையில் கடைசி  மேட்ச் நடந்து முடியும் பொழுது அனைத்து பார்வையாளர்களுக்கும் டீ சர்ட், பந்துகள் தரப்படுவது வழக்கம். அதேபோல் அனைவருக்கும் மைதானத்தை சுற்றி வந்து டாடா காட்டிவிட்டு நன்றி சொல்வதும் வழக்கம். இதனால் கூட ரசிகர்களை ஸ்டேடியத்தில் காத்திருக்க சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருக்கலாம் என்று ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது.