Skip to main content

ஆஸி. மண்ணில் வேகம் காட்டும் நடராஜன்... பிசிசிஐ வெளிட்ட காணொளி!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

T. Natarajan

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடர் நிறைவு பெற்றதும், இரு அணிகளுக்கும் இடையேயான இருபது ஓவர் போட்டி டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது . 

 

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வலைப்பயிற்சியின் போது இந்திய வீரர்களுக்கு நடராஜன் பந்துவீசும் காணொளியை பி.சி.சி.ஐ தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

 

வேகம் குறைவான இந்திய மைதானங்களிலேயே துல்லியமாக யார்க்கர் வீசி கணிசமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆஸ்திரேலிய மைதானங்களில் நடராஜனின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

 

 

Next Story

"இவர் இருக்கும் போது நான் டல்லாக இருந்ததில்லை" - கிரிக்கெட் வீரர் நடராஜன் 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Indian cricketer Natarajan talk about pugazh

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் 'வலிமை', அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'யானை','ஏஜென்ட் கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

 

இந்நிலையில் புகழ், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்,"புகழ் அண்ணா இருக்கும் பொழுது நான் டல்லாக இருந்தது இல்லை, என்னுடைய அழைப்பை ஏற்று எனது வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு! 

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Virender Sehwag

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்தது.

 

ஐ.பி.எல் தொடரில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில், சேவாக் வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்த பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிருந்த நடராஜனை பஞ்சாப் அணி 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒருவருக்கு, எதற்காக பஞ்சாப் அணி நிர்வாகம் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்தது என்று அப்போது கேள்வியெழுந்தது.

 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் அன்றைய வழிகாட்டியுமான சேவாக் இது குறித்துப் பேசுகையில், "எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. நான் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்ந்தெடுத்தபோது உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடாத ஒருவரை எப்படி இவ்வளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்தீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். அவரிடம் திறமை இருந்தது. பணத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் அணியில் இருந்த தமிழக வீரர்கள் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று கூறினார்கள். நான் அவரது ஒரு காணொளியைப் பார்த்தேன். உடனே அவரை ஏலத்தில் எடுக்க முடிவெடுத்தோம்.

 

துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு அவருக்குக் காயம் ஏற்பட அவரால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை. அந்த ஆண்டு அவர் விளையாடிய போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தோம். அவருக்கு வாய்ப்பு கிடைப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் அணியில் அவர் விளையாடுவது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் அவருக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.