Skip to main content

பும்ரா-அனுபாமா திருமணம்? - தாயார்  விளக்கம்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

anupama bumrah

 

இந்திய வேகப்பந்து வீச்சளார் பும்ராவும், 'ப்ரேமம்' படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அனுபாமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக, சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்ததும், ஒருவர் புகைப்படங்களை ஒருவர் லைக் செய்ததும் இதற்குக் காரணமாகும்.

 

கடந்த வருடம் நடிகை அனுபாமா, இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பும்ராவும் நானும் நண்பர்கள் மட்டுமே எனத் தெரிவித்தார். இந்தநிலையில் பும்ரா, நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர், திருமணத்திற்காக விலகியதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது. இந்தநிலையில் அனுபாமா, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்குச் செல்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். குஜராத் பும்ராவின் சொந்த மாநிலமாகும். இதனால் பும்ராவிற்கும், அனுபமாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக மீண்டும் செய்திகள் பரவின.

 

இந்தநிலையில், அனுபாமாவின் தாயார், இந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மலையாள நாளிதழுக்குப் பேட்டியளித்த அனுபாமாவின் தாயார், "அனுபாமாவைப் பற்றி எல்லோரும் மறக்கத் தொடங்கும்போது ஒரு புதிய கதை தோன்றும். நாங்கள் நேர்மறையாகவே அதனைப் பார்க்கிறோம். இதற்கு முன்பும் அனுபாமா மற்றும் பும்ராவை இணைத்துப் பல கதைகள் வெளிவந்தன. இவை இன்ஸ்டாகிராமில், அவர்கள் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை விரும்பாதவர்களால் உருவாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன். இதுபோன்ற, பொய்யான கதைகள் பரவியபின் அவர்கள் ஒருவரையொருவர் ஃபாலோ செய்யவில்லை என நினைக்கிறேன். ஒருமுறை அனுபாமா படப்பிடிப்பிற்குச் சென்ற அதே ஹோட்டலில் பும்ரா தங்கியிருந்தார். அப்போதுதான், ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். இதுபோன்ற கதை, இப்போது ஏன் வெளிவந்தது என்று எனக்குப் புரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

 

Next Story

மகிழ்ச்சியைப் பரப்புங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Spread the joy to Inspirational video released by Pakistan Cricket Team

 

முதல் குழந்தையை பெற்றெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மற்றும் சஞ்சனா தம்பதியினருக்கு, பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். 

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் நேற்று (10-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் தொடரவிருக்கிறது.

 

ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (10-09-2023) கொழும்பு, பிரேம தாசா மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 100 ரன்களை எளிதாகக் கடந்தது. பின்னர், அரை சதம் அடித்த ரோகித் 56 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் விக்கெட் 121 ரன்னில் விழுந்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. இன்றைக்கு (11-09-2023) இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து 50 ஓவர் வரை விளையாடும். பின்னர், பாகிஸ்தான் இலக்கைத் துரத்தும். ஆனால், இன்றும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்றைய ஆட்டமும் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த வாரம் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். தங்கள் மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். பல்வேறு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி, பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். இந்தப் பரிசை வாங்கிய பும்ரா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த பதிவில் “மகிழ்ச்சியை பரப்புங்கள்” என்ற வாசகத்தையும் எழுதி பதிவிட்டுள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்ப்பு! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Mohammed Siraj replaces Bumrah in the Indian cricket team!

 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஒவர் கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை. இந்த நிலையில், காயம் குணமடையாததால், ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.