Skip to main content

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் அடிக்கடி சண்டை போட  காரணம் என்ன?

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

siblings

 

உலகில் உள்ள மற்ற எல்லா உறவுகளையும் விட, உடன் பிறப்புகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர்.

 

சில சமயங்களில் பெற்றோரை இழக்க நேரிடும் போது, உடன் பிறப்புகள் ஒருவருக்கொருவர் தாயாகவும் தந்தையாகவும் மாறுகின்ற நெகிழ்ச்சியான தருணங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

 

ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட வீடுகளில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர - சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.  

 

உடன் பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரம். நாம் வெறுத்து ஒதுக்குவதற்கு அவர்கள் விரோதிகள் அல்ல, நம் குருதிகள். இந்த உணர்ச்சி பிணைப்பானது ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் வேறுபட்டிருக்கும்.

 

பெற்றோர் தங்களை வழி நடத்தும் விதம், வளர்ப்பு  முறை, குடும்பம் தவிர்த்து மற்றவருடனான தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை அவர்களின் குணங்களைத் தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் இராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது.

 

இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒரே பாதையில் பயணிப்பது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும். குறிப்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி பலன்களை கொண்டவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது, ஏராளமாக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

 

மேஷம் மற்றும் ரிஷபம்  

 

மேஷ ராசிக்காரர்கள் அதிக ஆற்றல் நிறைந்தவர்கள். வீட்டில் தன்னிசையான சில முடிவுகளை எடுக்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள். பொதுவாக, அவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதம் கொண்டவர்கள். எனவே, இந்த இரண்டு ராசி உடையவர்களும் ஒரே வீட்டில் இருந்தால், அவர்கள் ஒத்துப் போக வாய்ப்புகள் குறைவு.

 

கடகம் மற்றும் தனுசு

 

கடக ராசியை பொறுத்தவரை, அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருக்க விருப்பம் உடையவர்கள். பெரும்பாலும், பிறருடன் சண்டையில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள்.  

 

உணர்ச்சிவசம் அதிகம் இருப்பதால் எளிதில் அவர்களைக் காயப்படுத்த முடியும். இவர்களுடன், தனுசு ராசி கொண்ட உடன் பிறப்புகள் இருந்தால் அவர்களின் உணர்ச்சிகளை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். ஆகையால், இருவரும் தொடர்ச்சியான மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் அனுபவிக்கக்கூடும்.

 

மிதுனம் மற்றும் கன்னி ராசி

 

மிதுனம் மற்றும் கன்னி ராசி கொண்டவர்கள் பொதுவாக, அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவருமே ஒரே சமயம் கோபமாகவும், கவலையாகவும் இருப்பார்கள். இருப்பினும், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது மாறுபட்ட கருத்து மோதல்கள் ஏற்படக் கூடும்.

 

சிம்மம் மற்றும்  விருச்சிகம்

 

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவார்கள். விருச்சிக ராசி உடையவர்கள் தன்னிசையாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். இதனால், இருவருக்கும் இடையே தொடர்ச்சியான மாறுபட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

 

கும்பம் மற்றும் மகரம்

 

கும்ப ராசி உடையவர்கள் எப்பொழும் தங்கள் நலனில் அக்கறை செலுத்துவர். பிறரிடம் விட்டுக் கொடுக்காத குணம் படைத்தோர். மகர ராசிக்காரர்களோ பிறரிடம் ஆதிக்கம் செலுத்தும் தன்மை உடையவர்கள். ஆகையால், பெரும்பாலான நேரங்களில், இருவரும் சண்டையிடுவதைக் காணலாம்.  

 

மீனம் மற்றும் துலாம்

 

இவர்கள் இருவரும் நேர் எதிரான சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடும் தன்மை உடையோர்.

 

மீனம் ராசி கொண்டவர்கள் மென்மையானவர்கள், வாழ்க்கையின் பாதையில் செல்லக் கூடியவர்கள். இவர்கள் சிறு சொல்லைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உடனான நீண்ட நாள் பயணம் அதிக பிரச்சனைகளை உருவாக்கும். 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.