Skip to main content

குடல் இறக்கம் என்றால் என்ன? எப்படி சரி செய்வது? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

C

 

நோய்களை மருந்து கொண்டும் சரி செய்யலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துதான் குணப்படுத்த முடியும். அந்த வகையில் குடல் இறக்கம் பற்றி பிரபல டாக்டர் சந்திரசேகர் சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

குடல் இறக்கம் என்பது குடல் இயல்பான இடத்திலிருந்து இறங்கி விரைவீக்கம் ஆகுமளவிற்கு ஆவதாகும். இது ஒரு வகை. மற்றொரு வகை அதிகப்படியாக எடை தூக்குவதால் வயிறு இறுகி குடல் இறக்கம் ஏற்படும். உடற்பயிற்சி நிலையங்களில் பலர் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிக எடையை தூக்கினால் குடல் இறக்கம் ஏற்படும். குடலின் பலகீனமாக பகுதியில் எடை அதிகத் தன்மையால் குடல் வெளியில் வந்து விடும். அது ஒரு வகை குடல் இறக்கம் ஆகும். 

 

நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், அதிகப்படியான பளு தூக்கி வேலை செய்தல், நின்று கொண்டே அதிகப்படியான அழுத்தம் தந்து வேலை செய்வது இவர்களுக்கெல்லாம் வயிற்றில் பிரசர் அதிகமாக போகும். இது வேலை சார்ந்த நோய்தான் என்பதையும் மனதில் கொள்க. 

 

குடல் இறக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப நிலையில் முழு ஓய்வு எடுத்தாலே உடலே தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஆனால் ஓய்வு எடுக்கவே விரும்பாத பரபரப்பான உலகத்தில் குடல் இறக்கத்தை கவனிக்காமல் விட்டு சிலருக்கெல்லாம் குடல் இறங்கி முட்டி வரை வந்து அறுவை சிகிச்சை எல்லாம் செய்திருக்கிறோம். அந்த அளவுக்கு கவனிக்காமல் விட்டவர்களெல்லாம் உண்டு.

 

குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு அதிகப்படியான உடல் எடை தூக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அல்லது உங்கள் எடைக்கும் அதிகமான எடையை தூக்காமல் இருப்பதே நல்லது. பாடிபில்டிங், வெயிட் லிப்டிங் போன்று அதிகமான எடை தூக்கி பழகுகிறவர்கள் எடுத்த உடனேயே அவ்வளவு எடையை தூக்க மாட்டார்கள், கொஞ்சம் கொஞ்சமாக எடை தூக்குதலுக்கு உடலைப் பழக்கி அதன் பிறகு தூக்குவார்கள். எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது. புரதம் சார்ந்த உணவு வகைகளை உணவில் எடுத்துக் கொள்வதால் குடல் இறக்கம் நடைபெறாது. புகைப்பழக்கத்தை, ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.  குடல் இறக்கம் நோயின் தன்மை அதிகமானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும் என்றால் அதை தள்ளிப்போடக்கூடாது.

 

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.