Skip to main content

உடல் சூட்டை தணிக்க செய்ய வேண்டியவை - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 What to do to reduce body heat - explained by Dr. Arunachalam

 

மாசு நிறைந்த நம் ஊரில் நம்முடைய சருமத்திற்கு என்ன சிக்கல் வருகிறது என்பது குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.

 

நம்முடைய சருமம் என்பது உடலின் மிக முக்கியமான அரண். தோல் தான் நமக்கான பாதுகாப்பை வழங்குகிறது. தோலில் ஏற்படும் கட்டிகளுக்குக் காரணம் தோல் கிழிவது தான். தோலில் ஏற்படும் சிறிய ஓட்டை கூட நம்முடைய வாழ்க்கையை சில நாட்கள் முடக்கிப் போடும். அந்த அளவுக்கு தோல் என்பது நம்மைப் பாதுகாக்கக் கூடிய ஒரு சக்தி. தோலில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் நமக்குத் தரும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இவற்றில் ஏற்படும் பாதிப்புகள் தான் தோல் வியாதிகள் என்று அழைக்கப்படுகின்றன. 

 

தினமும் குளித்து தோலை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். தூசியில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் சோப்பு போட்டு கழுவினால் தான் முழுமையாக சுத்தப்படுத்த முடியும். இதை நாம் செய்யாமல் விட்டால் வியர்க்குரு ஏற்படும். அதனால் புண்கள் ஏற்படும். தலைக்கு குளித்தால் சளி பிடித்துவிடும் என்று தமிழ்நாட்டில் பலர் நினைக்கின்றனர். அது தவறு. பாத்ரூமில் நீண்ட நேரம் இருப்பது, நீண்ட நேரம் குளிப்பது ஆகியவற்றால் தான் சளி ஏற்படும். 

 

அதிக குளிர்ச்சியான சமயங்களில் கூட மலையாளிகள் தலைக்குக் குளிக்காமல் இருப்பதில்லை. அதனால் அவர்களுக்கு சளி பிடிப்பதில்லை. இதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய தோல்களைக் கழுவி அழுக்கை சுத்தப்படுத்துவது தான் குளியல். கழுவக் கழுவத் தான் முகமும் அழகாகும். சூட்டால் கட்டிகள் ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்கலாம்.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.