Skip to main content

கரோனா போன்ற வைரஸ்கள் உருவாகக் காரணம் என்ன... தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

நம் நாட்டுக்கே உரிய பாரம்பரிய சிறப்புகள் குடும்ப கட்டமைப்பு மற்றும்  உணவு முறைகள். இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் வீட்டில் வயசான பாட்டி, தாத்தா எல்லாம் இருந்தவரை, எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் அதை பாதிக்கப்பட்ட நபர் வெளியில் சொல்லும் முன்னரே நோயாளிகளின் செயல்களை வைத்து கணித்து அந்த பாதிப்பில் இருந்து மீட்கும் உணவை அவரிடம் சொல்லாமலே அவருக்கு கொடுத்து மீட்டு விடுவார்கள்.  சிறு குழந்தைகளுக்கு வசம்புக் காய்களை நூலில் கோர்த்து  வளையல் போல கட்டி விடுவார்கள். நாம் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சும்போது நமது மூச்சுக் காற்றில் உள்ள கிருமிகள் குழந்தைகளை அண்டாது.  சில வருடங்களுக்கு முன் வந்த மர்மக் காய்ச்சலை  நிலவேம்பு கசாயம் கொண்டே  துரத்தி அடித்த வரலாறு நமக்கு உண்டு. உலகில் அதிக எண்ணிக்கையில் வாழ்வது நுண் உயிரிகள் தான். அதற்கு பிறகே தாவரங்கள், கடல் உயிரினங்கள், மனிதன் எல்லாம். பல லட்சம் நுண் உயிரிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் வெறும் நூறு உயிரிகளை மட்டும் கண்டு பிடித்து வைத்து  அதற்குள் தான் இன்று சுற்றி சுற்றி ஆய்வு செய்து கொண்டு உள்ளனர். அதில் ஒன்றுதான் கொரோனா. இது அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப நம்ம நாட்டுக்குள்ள வந்துடுச்சு. 
 

h



எல்லா நுண் உயிரிகளும் அதற்கான தட்ப வெப்ப நிலை, உணவு இதெல்லாம் கிடைக்கும் இடத்தில்தான் வாழும். இன்றைய மருத்துவ உலகில் ஒருவரை நோயாளி என்று அறிவிக்க லேப் -டெஸ்ட் முறைதான் பயன்படுகிறது. லேபில் பெரும்பாலும் மனிதனின் கழிவில் இருந்துதான் ஆய்வு செய்வார்கள். சிறுநீர், மலம் நரம்புகளில் இருந்து எடுக்கப்படும் இரத்த மாதிரிகள். மிக முக்கியமான ஒரு விஷயம் உண்டு. கழிவுகள், கெட்டுப் போனது, குப்பைகள் இதில்தான் நுண் உயிரிகள் வாழும். இயற்கையான பேதி மாத்திரை, விளக்கெண்ணெய் குடித்து குடல் கழிவுகளை நீக்குங்கள்.  பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே ஒழியுங்கள். துரித உணவுகள் கழிவுகளே. கழிவுகளில் இருந்து எடுக்கப் படும் நுண் உயிரிகளே அதில் சேர்க்கப் படுகிறது. இயற்கையான உணவை உண்ணுங்கள். பசி எடுக்காமல் உணவு உட் கொள்ளாதீர்கள். சேமித்து வைத்த மாமிச வகைகள் நுண் உயிரிகளின் பிறப்பிடம். உணவே மருந்து. இயற்கையே தாய்மை.   

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.