Skip to main content

“தக்காளி சாஸை சாப்பிட்டால் ஆபத்து?” - எச்சரிக்கும் மருத்துவர் அருணாச்சலம்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

tomato sauce food health tips doctor interview


'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாதப் பொருளே ஒவ்வாமை என்போம். அதை அலர்ஜி என்றும் சொல்கிறோம். அதனால் ஏற்படுகிற அரிப்பு ரியாக்ஷனை மெடிக்கல் டெர்மில் ஹர்டிக் அரியா என்போம். நேற்று வரைக்கும் சாப்பிட்டவர்களுக்கு, உபயோகித்த ஒரு பொருளுக்கோ அது இன்னைக்கு ஏற்படுகிறது தான் அலர்ஜி. ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது என்பது அவர்களுக்கு உடலில் எந்த இடத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பது பொறுத்து தான் சொல்ல முடியும்.

 

ஒருவருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு சோப்பு, ஷாம்பு போன்றவை காரணமாக இருக்கலாம். தூசியில் வேலை பார்ப்பவர்களுக்கு தூசி ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். காலையில் எழுந்ததும் தும்மல் வந்து கொண்டே இருக்கிறது என்பார்கள். அவர்களுக்கு மூக்கில் வரக்கூடிய ஒவ்வாமை. வாயில் அடிக்கடி புண் வருகிறது என்றால், ஒரு சாப்ட் ஆன பேஸ்ட் இருக்கும் போது, எதுக்கு இரிட்டபிள் பேஸ்ட்ட யூஸ் பண்ணணும்னு எனக்கு புரியவில்லை. உடலுக்கு மேலே உள்ள தோலை விட வாயிக்குள் இருக்கும் தோல் சாப்ட் ஆனது. அந்த மாதிரியான பேஸ்ட் ஏன் உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

 

முக்கியமாக நாக்கில் அலர்ஜி வருவதற்கு காரணம், ஒரு டூத் பேஸ்ட். அதே கம்பெனி இன்னொரு டூத் பேஸ்ட் வருது. அதைப் பயன்படுத்தினாலே அலர்ஜி வராது. பணமும் வெளிநாட்டுக்கு போகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு நாளைக்கு ஐந்து பேரைப் பார்க்கிறேன். வாயில் வரக்கூடிய ஒவ்வாமை எல்லாவற்றுக்கும், பேஸ்ட்டுக்கு பிறகு அதிகமாக கல்யாண வீடுகளில் சமைக்கப்படும் வறுவல், பொறித்தலில் சேர்க்கப்படும் நிறமிகள் போன்ற உணவுகள் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். 

 

சிக்கன் சாப்பிடணும் ஆனால் அரிப்பு வரக்கூடாது என்று வருவார்கள். பால், முட்டை, மட்டன், சிக்கன், கடல் உணவுகள் உள்ளிட்டவைச் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே அலர்ஜி ஏற்படும். இதில், ஒரு சிலருக்கு நண்டு சாப்பிட்டால் ஒன்னும் செய்யாது. ஆனால், இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். புது துணிகளால் கூட அரிப்பு வரலாம். சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, லெமன் ஆகிய பழங்கள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். 

 

நாய், பூனை, மாடு, ஆடுகள் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கக் கூடிய விலங்குகளால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். சோப்பு, ஷாம்பு, பர்ஃபியூம், பாடி லோஷன்ஸ் உள்ளிட்டவை ஒத்துக் கொள்ளாமல் கூட போகலாம். மருத்துவர்கள் தரும் மாத்திரைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். நீங்கள் சென்று கடையில் வாங்கி சாப்பிடும் மருந்துகளால் கூட ஏற்படலாம். ஆஸ்துமாவும் அரிப்பு வகையைச் சேர்ந்த ஒவ்வாமை தான். அது நுரையீரலில் ஏற்படக் கூடிய ஒவ்வாமை.  

 

எல்லா பொருட்களில் இருந்தும் ஒவ்வாமை வரலாம். ஒரு ஒன்றரை வயது குழந்தைக்கு அரிப்பு என்று அந்த தாய் அனைத்து மருத்துவர்களையும் அணுகி குழந்தைக்கு சிகிச்சைப் பெற்றார். எனினும் சரியாகவில்லை. என்னிடத்தில் வந்தார். அப்போது, நான் குழந்தைக்கு என்னென்ன உணவுகளை தருகிறீர்கள் என்று எழுதி வாருங்கள் என்று சொன்னேன். குறிப்பாக, அரிப்பு ஏற்பட்ட ஆறு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து எழுதி வாருங்கள் என்று கூறினேன்.

 

அதில், பாலை தவிர டொமேடோ சாஸை வைத்து தான் குழந்தைக்கு இட்லி கொடுத்திருக்கிறார்; டொமேடோ சாஸை வைத்து தான் சாப்பாடு கொடுத்திருக்கிறார். டொமேடோ சாஸை மட்டும் நிறுத்தனாங்க. அந்த குழந்தை குணமாகிவிட்டது" என்றார். 

 

Next Story

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Krithika Tharan | Diet | Nutrition |

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா என்ற நம்முடைய கேள்விக்கு, தான் டயட் சார்ட் கொடுத்த ஒருவரைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

40 வயது பெண்மணி அவருடைய கணவருடன் வந்திருந்தார். தன் குழந்தைகள் தன்னை மதிப்பதில்லை என்று கவலைப்பட்டார். உடல் 100 கிலோவைத் தாண்டி இருந்தது. உடல் குண்டாக இருப்பதாலும் அழகாக இல்லாததாலும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தன் மேலேயே ஒரு தன்னம்பிக்கை இல்லாமல் நிறைய டிப்ரஷனோடு இருந்தார். உடல் அழகை தாண்டி வாழ்க்கை சிக்கல்களால் கூட இருக்கலாம். உணவு மட்டுமே தனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று மூன்று வேளை நன்றாக சுவையாக சமைத்து சாப்பிட்டு உடல் எடை அதிகமாகி 80லிருந்து 100 கிலோ  தொடும் அளவுக்கு போயிருக்கிறார். 

அவர் கணவரும் உடல் இளைப்பதில் தான் சிக்கல் என்று டயட்டிற்காக வந்தார். ஆனால் இந்த பெண்மணிக்கு கூடவே டிப்ரஷன் இருந்தது என்று அவர்கள் வீட்டில் என்னை யாரும் கவனிக்கவில்லை. வயதினால் அவ்வப்போது வரும் இரிட்டேஷன் தான்  என்று சாதாரணமாக விட்டு விட்டனர். ஆனால் இவரோ மருத்துவ சிக்கல் வந்து ஆன்டி டிப்ரசென்ட் மாத்திரை எடுக்கும் அளவு மனப் பிரச்சனை இருந்திருக்கிறது. இதுபோன்ற மாத்திரை ஆரம்பத்தில் எடுக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க போட முடியாது. அதற்கு முதலில் வாழ்வியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இவருக்கு  முதலில் உடல் எடை குறைப்பதில்  கவனம் கொள்ளப்பட்டது.

முதலில் டயட் சார்ட் போட்டுக் கொடுத்தோம். அடுத்து அது கூடவே CBT என்ற Cognetive Behavior Therapy, மெடிட்டேஷன், மூச்சுப் பயிற்சி, உடற் பயிற்சி என எல்லாவற்றையும் தொடர்ந்து கொடுத்து வர அவர் வாழ்க்கையை இயல்பாக பாசிட்டிவிட்டியோடு பார்த்தார். என் பேச்சை யாரும் மதிப்பதில்லை போன்ற எண்ணத்திலிருந்து மிக அழகாக தினசரி வாழ்வையே ரசித்து ஆத்மார்த்தமாக எல்லா பயிற்சியையும் செய்தார். ஒழுக்கமாக கடைபிடித்ததால் சரியாக 100 நாட்களில் 17 கிலோ குறைத்தார். கூடவே சில ட்ரைனிங்குடன் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அந்த கவுன்சிலிங்கினால் தான் இவ்வளவு முயற்சிகள் எடுத்து உடல் எடை தன்னால் குறைக்க முடியும் என்று பார்த்ததும் தன்னம்பிக்கை தானாக பிறந்தது. மேலும் தன்னுடைய குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், எவ்வளவு எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் 40 வயதை ஒட்டித்தான் இருப்பர். எனவே அவர்களோடு ஏற்படாத புரிதலினால் குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்து நிறைய பெற்றோர்கள் டிப்ரசனுக்கு போவதை அதிகம் பார்க்க முடிகிறது. 

உடலை குணப்படுத்த மனம் சீராகும். மனதை குணப்படுத்த உடல் சீராகும். இப்படித்தான் அவருக்கு தெரப்பி, கவுன்சிலிங், உடற்பயிற்சி என்று இரண்டு புறமும் கொடுத்து தேற்ற, அவர் நன்றாக உடலை மாற்றினார். அடிக்கடி தனக்கு ஓவர் திங்கிங் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் ஓவர் திங்க் செய்யும்போது மூச்சை கவனியுங்கள். சிந்திக்கும் விஷயம் பயனுள்ளதாக இருந்தால் தொடர்ந்து சிந்தியுங்கள். தேவையில்லாத சிந்தனை என்றால் விட்டுவிடுங்கள் என்று சிறு சிறு டிப்ஸ் கொடுத்து அவரை சரி செய்தோம். உடல் எடை அதிகம் இருக்கிறது என்பது ஆரோக்கியமற்ற செயல்தான். அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அதற்கு தாழ்வு மனப்பான்மை கொள்வது சரியாகாது. பொதுவாக பெண்களுக்கு முக்கியமாக 40 வயதிற்கு பின் உடல் எடை கூடுவது போன்ற தொந்தரவு பல காரணங்களால் வரலாம்.

சில பேருக்கு குழந்தை பிறந்தவுடன் அதை குறைக்க முடியாமல் போகலாம். சில பேர் பாலூட்டும் போது நிறைய சாப்பிட்டு விடுவர். அதை குறைக்க முடியாமல் போகலாம். சத்து குறைபாட்டினால் அடிக்கடி பசி எடுத்து தவறான உணவுகளை எடுப்பதினால் வரலாம். நரம்பு பிரச்சனை, ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும்  வீட்டில் இருக்கும் சில பிரச்சினைகளால் கூட டிப்ரஷன் அதிகமாகி உடல் எடை போடலாம். சின்ன சின்ன ஸ்டிரஸ் லெவல்கள் வாழ்க்கையில் இயல்புதான். அதனால் நொந்து போகாமல் துணிவோடு செய்யும் போது எல்லாமே சாத்தியம். உடல் எடையோ எந்த தொந்தரவோ எதுவானாலும் அவர்களுக்கு துணிவையும் தன்னம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். அடுத்து அந்த பிரச்சனையை சரி செய்ய அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது.