Skip to main content

கராத்தே டூ பாட்மிட்டன்,  பாட்மிட்டன் டூ பத்மபூஷன்!   

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

 

மார்ச் 17 - சாய்னா பிறந்த நாள் 

சானியாவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் இருந்த வெற்றிடத்தை, மன்னிக்கவும் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது, இந்திய பெண்கள் விளையாட்டில் இருந்த  வெற்றிடத்தை நிரப்ப திறமையும் ஸ்டைலும் கொண்டு வந்த சாய்னா நேவால், இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். பாட்மிட்டன் விளையாட்டில், உலகின் முதலாம் இடம் பிடித்த முதல் இந்திய பெண்மணி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணியும் இவர்தான். கிரிக்கெட் விளையாட்டில் பிரபலம் அடைந்த இந்தியர்களை, தன் விளையாட்டின் மூலம் பாட்மிட்டன் பக்கம் திசை திருப்பியவர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் 'டார்லிங் டாட்டர்' என்று அழைக்கப்பெற்றவர். சாய்னாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
 

Saina Nehwal

 

  • பாட்மிட்டன் விளையாட்டில் இன்று கலக்கி வரும் இவர், ஆரம்பத்தில் ஒரு கராத்தே கிட். கராத்தேவில் பிரவுன் பெல்ட்டும் வாங்கியிருக்கிறார்
     
  • ஹர்விர் சிங் மற்றும் உஷா நேவால் சாய்னாவின் பெற்றோர்கள். இவர்கள் இருவரும் கூட பாட்மிட்டன் வீரர்களாம். இருவரும் மாநில அளவில் விளையாடியுள்ளனர்
     
  • சாய்னா தற்போதுவரை 21 சர்வதேச பட்டங்களை வென்றிருக்கிறார்
     saina with parents
     
  • 28 வயதுக்குள்ளாகவே இந்தியாவின் உயரிய விருதுகளான அர்ஜுனா விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்றவர்
     
  • ஆசிய சாட்டிலைட் பாட்மிட்டன் போட்டிகளில் முதன் முதலில்  இரண்டுமுறை வென்ற பெண்மணி சாய்னா தான்
     
  • காமன் வெல்த் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்
     
  • அவருடைய சிறந்த காலத்தில், உலகளவில் அதிக சம்பளம் வாங்கிய பாட்மிட்டன் வீரராக திகழ்ந்திருக்கிறார்
     saina on ground
     
  • ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பின்னும் ஐஸ் கிரீம் தான் விரும்பி சாப்பிடுவாராம்
     
  • 2015 ஆம் ஆண்டில் உலக தரவரிசையில் முதலாம் இடத்தில் இருந்த சாய்னா, தற்போது பதினோராம் இடத்தில் இருக்கிறார்
     

மார்ச் 17 1990 ஆண்டு பிறந்ததால், இன்று இவர் 28 வயதை தொட்டிருக்கிறார். இந்தியாவில் ஒரு பெண்ணாக இருந்து, பல தடைகளை தாண்டி வந்து, வீட்டில் பொருளாதார சிரமங்களைத் தாண்டி  இந்திய மக்களுக்கு ஒரு இன்ஸபிரேஷனாக இருக்கிறார். ஹாப்பி பர்த் டே சாய்னா!                 

                 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.