Skip to main content

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா..?

Published on 11/02/2020 | Edited on 11/02/2020


உணவுப் பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களில் முதன்மையானது ஃபிரிட்ஜ் என்று அழைக்கப்படும் குளிர் சாதனப்பெட்டி. தற்போது குளிர் சாதனப்பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு அதன்பாடு அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள் என்று எளிதில் வீணாகும் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது  அது அவ்வளவு சீக்கரம் கெட்டுபோகாமல் பாதுகாக்கிறது. ஆனால், தற்போது சமைத்த உணவுப்பொருட்கள், இறைச்சி முதலிய பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் வைத்திருப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கின்றது.
 

lk



அதன்படி இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதில் அதிக அளவு பாக்டீரியா உருவாகி விடும். எனவே அதனை சரிவர சமைக்காமல் சாப்பிட்டால் அது இரைப்பையை பாதித்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. இது இரைப்பையை மட்டும் தாக்காமல் அதன் பாதிப்பு சிறுகுடல், சிறுநீரகம் வரை செல்கின்றது. மாதக்கணக்கில் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அதில் உள்ள புரதச் சத்துக்கள் குறைந்துவிடுவதோடு, அதன் தூய்மை தன்மையும் கெட்டு அது உணவாக இல்லாமல் விஷமாக மாறிவிடுகின்றது. பெரும்பாலும் ஓட்டல்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்த உணவையே அதிகம் பயன்படுத்துவதால் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே வெளிஇடங்களில் சாப்பிடுவதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது நிறுத்திவிட வேண்டும். சமைத்த உணவு பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தையும் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

Next Story

பிராய்லருக்கு சாயம் பூசி நாட்டுக்கோழி என விற்பனை ; 22 கிலோ இறைச்சி அழிப்பு

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Selling broiler chicken dyed as country chicken; 22 kg of meat recover

 

அண்மையில் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறிப்பாக தரமற்ற அசைவ உணவுகளை பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் ஆகிய தலைமையிலான அதிகாரிகள் குழு திடீரென திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாலையோர இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வில் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பிராய்லர் கோழிகளை வாங்கிவந்து  செயற்கையாக நிறங்களைப் பூசி நாட்டுகோழி என விற்பனை செய்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்தது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அவர்களை கடுமையாக எச்சரித்து நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள் எவ்வாறு தரமான முறையில் இறைச்சிகளை வாங்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

 

 

 

Next Story

“இறைச்சி சாப்பிடுவதால்தான் பேரிடர்கள் ஏற்படுகின்றன...” - ஐஐடி இயக்குநர்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Eating meat causes cloudbursts say iit mandi director laxmidhar behera

 

‘இறைச்சிகள் அதிகம் சாப்பிடுவதால்தான், இமாச்சலப்பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன’ என்று ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

 

இமாசலப்பிரதேச மாநிலம் மண்டி ஐஐடியில் இயக்குநர் லட்சுமிதர் பெஹரா நிகழ்வு ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், இறைச்சி சாப்பிடுவதால் தான் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக இயற்கை பேரிடர் ஏற்படுவதாகக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அந்த நிகழ்வில் பேசிய லட்சுமிதர் பெஹரா, ‘நீங்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?’ என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அமைதியாக இருக்க, உடனே, ‘அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’ என்று கூறிய லட்சுமிதர் பெஹரா, ‘இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மாணவர்களிடம் கூறியுள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “இமாச்சலப்பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இங்கு மேக வெடிப்பு, நிலச் சரிவு, பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதைப் போன்றது. இதுபோன்ற பேரிடர்களை மீண்டும்  நீங்கள்  பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கைப் பேரழிவு” என்று பேசினார்.