Skip to main content

தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகளே விவகாரத்துக்கு முக்கிய காரணம் - மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020


தற்போதைய சூழ்நிலையில் விவகாரத்து வழக்குகள் அதிகமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில், என்ன காரணத்துக்காக விவகாரத்துக்கள் ஏற்படுகின்றது, எவ்வாறு அதனை குறைப்பது முதலியவற்றை பற்றி மனநல மருத்துவர் மருத்துவர் ஆர்.எஸ் ராஜேந்திரன் விரிவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அடுத்த முறை பிறப்போமா என்று தெரியாது. அப்படி பிறந்தாலும் இதே அப்பா, அம்மா, இதே மனைவி மக்கள் கிடைப்பார்களா என்று தெரியாது. இப்போது கிடைத்துள்ளார்கள். அருமையான வாழ்க்கை ஒருமுறைதான் அமையும். அதை வாழ்ந்தால் என்ன என்பதே என்னுடைய கேள்வி. நான் மதுரை மாவட்டத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் ஆலோசகராக இருந்துள்ளேன்.
 

jk



அங்குச் சென்ற பிறகு குடும்பத்தில் நடக்கும் ஏராளமான பிரச்சனைக்களுக்காகத் தம்பதியினர் அங்கு வருவதை பார்த்திருக்கிறேன். என்ன காரணத்துக்காக வருகிறீர்கள், எதற்காக விவகாரத்து கேட்கிறீர்கள் என்றால் பல்வேறு விதமான பதில்களைத் தம்பதியினர் தெரிவிப்பார்கள். முக்கியமாக விவகாரத்துக்கு 80 சதவீத காரணம் தாம்பத்திய உறவுதான். தாம்பத்திய உறவு ஒரு தெய்வீக உறவு. அதை யாரும் முறையாக புரிந்துகொள்ள வில்லை. அடுத்து பத்து விழுக்காடு ஈகோ பிரச்சனை. நான் பெரியவனா, நீ பெரியவளா என்ற காரணத்தால் ஏற்படும் சண்டைகள் இந்தப் பத்து சதவீதத்தில் வந்துவிடுகின்றது. அடுத்து ஏழு விழுக்காடு அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலையிடுவதால் ஏற்படுகின்றது. மீதி மூன்று விழுக்காடு வரதட்சனை காரணமாக ஏற்படுகின்ற விவகாரத்து. தற்போது வரதட்சனை காரணமாக ஏற்படுகின்ற விவகாரத்துகள் குறைந்துள்ளன. 

இதில் 80 சதவீத விவகாரத்துக்கள் தாம்பத்தியம் சார்ந்தே இருக்கின்றது. இந்தியாவிலோ அல்லது நம்முடைய தமிழகத்திலோ பாலியல் சார்ந்த கல்வி முறையாகச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. கையை திறந்து காட்ட வேண்டும். இவ்வளவுதான் பாலியல் என்று வெளிப்படுத்த வேண்டும். அது இல்லாத காரணத்தால்தான் இவ்வளவு வழக்குகள், கள்ளக்காதல் பிரச்சனைகள் நாட்டில் ஏற்படுகின்றது. மனித வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதனால் இப்போதே சந்தோஷமாக வாழ்ந்துவிட வேண்டும். நல்ல அப்பா, அம்மா, மனைவி மக்கள் இருக்கும் போதே அதனை நாம் சிறப்பான முறையில் வாழ்ந்துவிட வேண்டும். கையைவிட்டு போன பிறகு நாம் எதையும் செய்ய முடியாது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அதனைத் தன்னுடைய திருக்குறளில் கூறியுள்ளார். அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை வெவ்வேறு படிநிலைகளில் அவர் விவரித்துள்ளார். ஆனால் அவர் அனைத்தையும் இரண்டு வரிகளில் முடித்துவிட்டார். மனிதனுக்கு உடலும் உள்ளமும் சேர்ந்துதான் இருக்கிறது. ஆனால் உடலுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் உள்ளத்துக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். 

எங்களிடம் கவுன்சிலிங் வருபவர்களிடம் என்னதான் பிரச்சனை என்று கேட்போம். ஒருவர் வாதி, மற்றொருவர் பிரதிவாதியாக இருப்பார்கள். வருகிறவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டால் இவளை எனக்குப் பிடிக்கவில்லை, விவகாரத்து கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்தப் பெண்ணிடம் கேட்டால் இவருக்கு ஆண்மையில்லை எனக்கு விவகாரத்து கொடுங்கள் என்று கேட்பார்கள். திருமணத்தை இருவருமே புனிதமாக நினைப்பதில்லை. கண்ணை கசக்கிக்கொண்டு நீதிமன்றம் செல்கிறார்கள், இல்லை போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள். இது தேவையில்லாதது. நம் தலைக்கு மேல் மின்விசிறி இருக்கு, அதை நிறுத்த வேண்டுமானால் சரியான பொத்தானை அழுத்தினால்தான் மின்விசிறி நிற்கும். அதைப் போல சரியான மருத்துவரிடம் போய் குறைகளைச் சொல்லி நிவர்த்தி அடையுங்கள். சரி செய்ய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

 

Next Story

கணவனின் தொடர் தொல்லை; காலை வெட்டிய மனைவி கைது

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Continued action by the husband; Arrested wife who decided in anger

 

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.

 

 

Next Story

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

coimbatore family return pudukkottai temple karur incident 

 

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் குடும்பத்தினர் மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் குடும்பத்தினர் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். பின்னர் வழிபாட்டை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றிச் சென்ற மற்றொரு கனரக வாகனமும் வந்து கொண்டிருந்தது.

 

இந்நிலையில் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தென்னிலை போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 38), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் மனைவி நதியா (வயது 37) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துலட்சுமியின் குழந்தைகள் பாலச்சந்திரன் (வயது 12), கோவர்தனி (வயது10), மேலும் பன்னீர்செல்வம், ரூபன், வெங்கடேஷ், ரஜினி உள்ளிட்ட 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து காவல்துறை அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் மருத்துவமனைக்கு வரவுள்ளனர். அதன் பிறகு முழு விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.