Skip to main content

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க; சித்த மருத்துவர் அருண் ஆலோசனை

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 To keep diabetes under control; Siddha doctor Arun advises

 

நீரிழிவு நோய் குறித்த பல்வேறு தகவல்களை சித்த மருத்துவர் அருண் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

உலகில் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா இன்று இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளரை நாம் பார்க்க முடியும். உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்தது தான் இதற்கான காரணம். நாள்பட்ட நீரிழிவு நோயாளருக்கு காலில் புண் ஏற்படும். செருப்பு போடாமல் இருத்தல், பாதங்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல், சர்க்கரையை கட்டுக்குள் வைக்காமல் இருத்தல் ஆகியவையே இதற்கு காரணம். கால்களில் ரத்த ஓட்டம் குறைவதால் உணர்வு இழப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது மருத்துவரை சந்தித்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

பாதத்தில் உணர்வு இழப்பு ஏற்படுவது என்பது ஆரம்பகட்ட அறிகுறிகளுள் ஒன்று. அப்போதே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு அதிக நாளாகும். வலிக்காமல் இருப்பதால் புண்கள் குறித்து பலர் கவலைப்பட மாட்டார்கள். கவனிக்காமல் விட்டால் புண்கள் அழுகி, எலும்புகள் வரை செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. புண்கள் எந்த நிலையில் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவார்கள். எல்லை மீறிய நிலையில் தான் விரல்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்தும் நவீன மருத்துவம் சொல்லும் வழிகள்.

 

சித்த மருத்துவத்தில் மருந்துகள் மூலமாகவே இந்தப் புண்களை குணப்படுத்த முடியும். விரல்களை, கால்களை எடுக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை. உள் மருந்துகள், வெளி மருந்துகள் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் புண்களை ஆற்ற முடியும். நீரிழிவு நோயாளர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் சரியாக இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். தரையில் படுத்து உருளுவது கூட ஒரு வகையான பயிற்சிதான். இதன் மூலம் சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். இதற்கு சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகளும் இருக்கின்றன.

 

 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.