Skip to main content

மூட்டு வலியைப் போக்கும் பாம்பு மசாஜ்... பிரபலமாகும் புதிய வழி!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

snake massage

 

சிலருக்கு பாம்பு ஊர்வது போன்ற நினைவுகள் வந்தாலே நெளிந்துகொண்டே மனது ஓட்டம் எடுக்கும். பாம்புகள் மேல் உள்ள அச்சம் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியானது. அந்தப் பாம்புகளை உங்கள் முதுகில் ஊர்ந்து செல்லவிட்டால் என்ன செய்வீர்கள்? அப்படி அதை ஊர்ந்து செல்ல வைப்பதால் உங்களின் முதுகு வலி சரியாகும் என்றால் அனுமதி கொடுப்பீர்களா?

 

அண்மையில்கூட பலரை ஆச்சர்யத்துடன் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி வைரலானது அந்த எகிப்து நாட்டு வீடியோ. மேலே சொன்ன பாம்புகள் குறித்த கேள்விகளைச் செயலில் காட்டும் வீடியோதான் அது. மசாஜுக்காக படுக்கையில் கவிழ்ந்து படுத்திருக்கிறார் ஒருவர். அவரது முதுகில் குட்டிக் குட்டி பாம்புகளை ஊர்ந்து செல்லவிடுகிறார் மசாஜ் செய்பவர். இந்த வீடியோதான் உலகமெங்கும் வைரலாகி வருகிறது.

 

உடல் வலியைச் சரியாக்க அல்லது அமைதி கிடைக்க சிலர் ஸ்பாவை அணுகுகிறார்கள். அங்கே சென்றதும் அவர் உடம்பு பகுதியில் எண்ணெய் அல்லது ஜெல் அல்லது பவுடர் போன்றவற்றை அப்ளை செய்துவிட்டு வலி எடுக்கும் வகையில் கைகளால் மசாஜ் செய்துவிடுவார்கள். தாய்லாந்து நாடு மசாஜுக்கு மிகவும் ஃபேமஸான நாடு. அங்கு வித்தியாசமாகவும் வகைவகையாகவும் பல முறைகளில் பல பொருட்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வார்கள். ஒவ்வொரு மசாஜுக்கும் தனித்தனி விலை. ஆயிரத்தில் தொடங்கி லட்சத்திற்கும் மேலாக நீள்கிறது அந்த விலைப்பட்டியல். 

 

சமீபத்தில் கூட தாய்லாந்தில் யானையை வைத்து மசாஜ் என்று வீடியோ ஒன்று வைரலானது. அதேபோல, எகிப்தில் பாம்புகளை வைத்துச் செய்யும் மசாஜ் பிரபலமாகி வருகிறது. 

 

இதுகுறித்து தெரிவிக்கும் அந்த ஸ்பாவின் ஓனர், “இந்த பாம்பு மசாஜ் எடுத்துக்கொள்பவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. சருமத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்வதால் இரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கிறது. அதனால் மன நிம்மதியும் கிடைக்கிறது” என்று கூறுகிறார். 

 

மேலும், இந்த மசாஜ் இரத்த ஓட்டத்தைச் சீராக அதிகரிப்பதனால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது, தசை பிடிப்பையும் சரி செய்கிறது. மூளையில் என்டார்பினைச் சுரக்கச் செய்வதால் வலி உணர்வைக் குறைத்து பாஸிட்டிவிட்டியை உருவாக்குகிறது. இந்த மசாஜுக்காக பைத்தான் வகை பாம்புகள் மற்றும் சில விஷமற்ற பாம்புகள் என 28 வகை பாம்புகளைப்  பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

 

தொடக்கத்தில் இந்த மசாஜ் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு இலவசமாக மசாஜ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மசாஜுக்கு 100 எகிப்திய பவுண்ட்கள் வாங்கப்படுகிறது. 20 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த மசாஜ் செய்யப்படுகிறது. 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

எகிப்தில் இஸ்ரேலியர்கள் இருவர் சுட்டுக்கொலை!

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Two Israelis shot passed away Egypt

 

இஸ்ரேல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சமயத்தில், எகிப்தில் இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் -அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரை அறிவித்து வான்வெளி, தரைவழி என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பு மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் எகிப்து நாட்டில் இஸ்ரேலியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் மத்திய பகுதி அலெக்சாண்டிரியாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அந்த  நகரிலுள்ள பாம்பே தூண் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூடியிருந்தனர். திடீரென, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில், மூன்று பேர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் இஸ்ரேல் நாட்டு பயணிகள் எனவும் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, வன்முறையை நிகழ்த்திய போலீஸ் அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது.