Skip to main content

உறவுகளுக்கிடையே ‘கேஸ் லைட்டிங்’ என்றால் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
drradhika-murugesan-mental-health-tips- Gaslighting

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப்  பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில்  'கேஸ் லைட்டிங்'  என்றால் என்னவென்று விளக்குகிறார்.

சோஷியல் மீடியாவில் 'கேஸ் லைட்டிங்' என்று  சுலபமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் இதை டார்க் காமெடி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த 'கேஸ் லைட்டிங்' என்பது 1930ல் பிரிட்டிஷில் வந்த திரைப்படம் ஒன்றின் மூலம் பிரபலமானது. அதில் வரும் வக்கிர புத்தி கொண்ட கணவன் தன் மனைவியை எமோஷனல் அபியூஸ் பண்ணுபவன். வீட்டில் இருக்கும் எல்லா கேஸ் விளக்குகளையும் மங்க வைத்து விடுகின்றான். மனைவி அதை சரிசெய்யும்படி சொல்லும்போதும் கூட அதை அப்படியே மனைவியின் பக்கம் திருப்பி உனக்கு தான் ஏதோ மனக்கோளாறு அதனால் தான் அப்படி தெரிகிறது மற்றபடி விளக்குகள் எல்லாமே நன்றாகத் தானே எரிகிறது என்று குழப்பிவிடுகிறான். அந்த மனைவியும் அதை நம்பி சுயநம்பிக்கையை இழந்து தனக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தன்னை இழக்கிறாள். இதன் மூலமாவே 'கேஸ் லைட்டிங்' பிரபலம் ஆனது.

இது காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஆனால் அவ்வளவாக இதை யாருமே எமோஷனல் அபியூஸ் என்று கவனம் காட்டவில்லை. இந்த 'கேஸ் லைட்டிங்' எங்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறதோ அங்கு நடக்கலாம். ரொம்ப அன்யோன்யமாக இருக்கும் உறவுகளிடமும், சில சமயம் பெற்றோர் - குழந்தைகள் உறவிலும் கூட இது நடக்கலாம். எல்லோர் முன்னாடியும் தன்னுடைய பார்ட்னரை அசிங்கப்படுத்துவது, மட்டம் தட்டுவது அல்லது அவர் கூச்சம்படும்படி ஏதும் செய்வது, கண்ட்ரோல் செய்வது போன்றவை 'கேஸ் லைட்டிங்'இல் நடக்கும். அதை குறித்து கேட்டால் கூட, உனக்கு தான் ஏதோ பிரச்சனை, நான் விளையாட்டாக சொன்னதை நீதான் அப்படி எடுத்து கொள்கிறாய் என்று சொல்லி அவரையே குற்றவாளி ஆக்குவது.

கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை சொல்லி காட்டும்போது கூட தான் அப்படி சொல்லவே இல்லை, தன்னுடைய பார்ட்னர் தான் பொய் சொல்கிறார் போல மாற்றி நிஜத்தை மறுப்பது இது 'கேஸ் லைட்டிங்கில்' அடங்கும். இது போன்றவை எந்த ஒரு நபர் 'நார்சிசம்' குணாதசியம் கொண்ட நபர்களோடு இருக்கிறார்களோ, இந்த  'கேஸ் லைட்டிங்' என்ற எமோஷனல் அபியூஸ் நடக்கும். இவர்களோடு நாளடைவில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும்போது அவர்கள் தங்களுடைய சுய மதிப்பை இழந்து, தான் யார் என்ற அடையாளத்தையே இழந்து விடுவார்கள். இதுவும் ஒரு வகை எமோஷனல் அபியுஸ்தான்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.