Skip to main content

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dr. C Rajendiran - Goverment hospital - health care

 

சரியான வகையில் உணவு உண்ணும் முறை குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

அனைவருக்கும் ஏன் வியாதி வருவதில்லை என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். தங்களுக்கு மட்டும் நோய்கள் ஏற்படுவது ஒரு சாபம் என்று பலர் நினைக்கின்றனர். சிலருக்கு பிறக்கும்போதே மரபணு சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. சிலருக்கு வாழும் முறை, பழக்கவழக்கங்கள் சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். நாம் உணவு உண்ணும் முறைக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. ஆரோக்கியமான முறையில் நாம் உணவு உண்ண வேண்டும். 

 

வயிற்றுப் பசி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய அன்றாட வேலைகளைச் செய்வதற்கு நமக்குள் ஒரு எரிபொருள் தேவை. அதைக் கொடுப்பது உணவுகள் தான். 2020 ஆம் ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் நான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் சாப்பிட முடியாது. எனக்கு செயற்கை ஆக்சிஜன் கொடுத்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் நான் அசராமல் நம்பிக்கையோடு இருந்தேன். அதன் மூலம் கொரோனாவை விரட்டியடித்தேன். அதற்கு கடவுளும் என் மீது அன்பு கொண்டவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

 

அந்த நேரத்தில் என்னுடைய எடை 21 கிலோ குறைந்திருந்தது. அப்போது என்னால் மிகவும் குறைவாகவே சாப்பிட முடிந்தது. உடல் எடையைக் குறைப்பதில் நம்முடைய உணவுப் பழக்கம் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை சொந்த அனுபவத்தின் மூலம் அப்போதுதான் நான் அறிந்தேன். நம்மையே அறியாமல் தினமும் நாம் சாப்பிடும் தின்பண்டங்களால் அதிகமான கலோரிகளை உள்ளே எடுத்துக்கொள்கிறோம். நாம் வேகவேகமாக சாப்பிடும்போது 'போதும்' என்கிற உணர்வு விரைவாக வந்துவிடும். இதனால் ஜீரணமும் கஷ்டமாகும். 

 

மெதுவாக சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள். உணவின் அளவை அவர்களால் குறைக்க முடியாது. எனவே வேகமாக சாப்பிடுவதும் தவறு, மிகவும் மெதுவாக சாப்பிடுவதும் தவறு. உணவை உண்பதற்கு 15 நிமிடங்களை ஒதுக்கி ஆற அமர சாப்பிட வேண்டும். உணவைப் பொறுமையாக மென்று சாப்பிடும்போது வயிறு நிரம்பும் உணர்வும் கிடைக்கும், திருப்தியடைந்த உணர்வும் கிடைக்கும். உணவின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பதும் தவறு. இதனால் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகி, இன்னும் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் குறட்டைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? - மயக்க மருந்து நிபுணர் கல்பனா விளக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Dr Kalpana | Snoring | Child |

 

குறட்டையால் பாதிக்கப்படுகிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், குறட்டையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது, மயக்கமருந்து நிபுணர்களின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.

 

குறட்டை பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறட்டை விடுகிற குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக கவனிக்க வேண்டும். 

 

ஒரு குழந்தை தூங்கும் போது குறட்டை விடுகிறாள் அவளுக்கு எதாவது மருந்து கொடுங்கள் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். குழந்தையை நேரில் பார்க்காமல் மருந்து கொடுக்க இயலாது. நேரில் அழைத்து வாருங்கள் என்று வரச்சொல்லி பரிசோதித்தால் மூக்கின் உட்புறத்தில் இயல்பான அளவை விட அதிகமாக சதை வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய பிரச்சனையாகும். 

 

13 வயது குழந்தை பல நாட்களாக வாயில் தான் மூச்சு விட்டு இருந்திருக்கிறாள். யாருமே இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு முன் மயக்கமருந்து கொடுப்பதற்கு நிபுணரை அணுகினர். மயக்க மருந்து நிபுணர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்கும், இதய துடிப்பின் அளவினை பரிசோதித்தும் மயக்க மருந்து அளவு எடுத்து கொடுப்பார்கள். 

 

இந்த குழந்தைக்கு முழு மயக்க மருந்து தேவைப்பட்டது. குழந்தையை முழுமையான மயக்க நிலைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்தனர், இரண்டு மூக்கு துவாரத்திலும் சதை வளர்ந்திருந்தது. அதை நீக்கி அறுவை சிகிச்சை செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு தன்னால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியோடு அந்த குழந்தை சொன்னது.

 

சில சமயம் குறட்டைக்கு உடற்பருமன் காரணமாக சொல்லப்படும். ஆனால் சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள், அவர்களும் குறட்டை விடுவார்கள், தூங்கும் போது சுவாசிக்க உகந்தவாறு படுத்து இருக்க வேண்டும், அப்போது குறட்டையிலிருந்து விடுதலை அடையலாம். எல்லா விதமான குறட்டைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு குறட்டையின் தன்மை தீவிரம் அடைந்த பிறகு மருத்துவரை அணுகும் போது நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவையா அல்லது வெறும் மருந்து மாத்திரையால் குணப்படுத்தி விடலாமா என்பது பரிசீலிக்கப்படும். 

 

 


 

Next Story

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.