Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு பழம் போதும்..!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


எலும்புகள் வலுவடைவதற்குச் சப்போட்டாவை விடச் சிறந்த பழம் வேறு எதுவும் இல்லை. இந்தப் பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை திறனை அதிகரிக்கலாம். கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளதால் எலும்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு இது அதிகம் உதவுகிறது.சப்போட்டாவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் இதர சத்துக்கள் சரிவிகித்தில் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பேருதவி புரிகிறது. இதல் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.இளமையான தோற்றத்தை வழங்குவதில் சப்போட்டா பழங்கள் முதலிடத்தில் இருக்கும் பழங்களில் ஒன்று.


 

jk



மன அழுத்தம் நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சப்போட்டா பழங்கள் உதவி புரிகின்றது.இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன பதட்டம்,தூக்கமின்மை முதலியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுவதில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.இரத்தத்தை உறைய வைக்கும் சக்தி இயற்கையாகவே சப்போட்டா பழத்திற்கு அதிகம் இருக்கிறது.பெரும்பாலும் கோடைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்க சப்போட்டா பேருதவியாக இருக்கும்.
 

Next Story

எதிப்பான் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

Seizure of 6 tons of mangoes ripened by Ethipan chemical

 

சேலத்தில், எதிப்பான் ரசாயனத்தை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சில மாம்பழக் கிடங்குகளில், ரசாயன திரவத்தை தெளித்து மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சிவலிங்கம், புஷ்பராஜ் ஆகியோர் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள ஏடிஎஸ் பழக்கிடங்கு, கேஎஸ்கே பழக்கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தினர். இவை தவிர மேலும் 3 கடைகளிலும் சோதனை நடந்தது.

 

Seizure of 6 tons of mangoes ripened by Ethipan chemical

 

இரண்டு கிடங்குகளிலும், மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்காக எதிப்பான் எனும் ரசாயனம் தெளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு கிடங்குகளில் இருந்தும் 6 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரத்தயாரிப்புக் கிடங்கிற்குக் கொண்டு சென்று அழித்தனர். ரசாயன முறையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைத்த மாம்பழக்கிடங்கு உரிமையாளர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

ரசாயனம் மூலம் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது தெரிந்தால் உணவுப்பாதுகாப்புத்துறை சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், அவ்வாறான பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

 

 

 

Next Story

கயத்தாறில் பழச்சாறு அருந்திய மகள் மரணம்; தாய் கவலைக்கிடம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

fruit mixer

 

கயத்தாறு பகுதியில் பழச்சாறு அருந்திய மாணவி உயிரிழந்த நிலையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது  மனைவி சாந்தி, மகள் லட்சுமி பிரியா. கயத்தாறு பகுதியில் உள்ள பழக்கடையில் பழச்சாறு வாங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்று வாங்கி வந்த பழச்சாற்றை அருந்திய சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரையும் கயத்தாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

 

இரண்டு நாள் சிகிச்சை பெற்றும் குணமாகாததால்  மாணவி லட்சுமி பிரியா மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு கொண்டு செல்லும் போதே மாணவி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகை செய்தனர். அவர்களுக்கு பதில் அளித்த போலீசார் 'மாணவி மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் உறுதி அளித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் அங்கு இருந்து களைந்து சென்றனர். மாணவியின் தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.