Skip to main content

காலை நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரக் காரணம் - விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

 Cause of heart attack in the morning time

 

மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பதையே இந்த இயந்திர உலகில் நாம் மறந்துவிட்டோம். தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் நம்முடைய உடலின் அமைப்பு குறித்தும் பல தகவல்களை நமக்கு ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா  வழங்குகிறார்.

 

காலையில் நாம் எழுந்து இரவு உறங்குவது முதல் பல்வேறு காலநிலை மாற்றங்கள் வரை உலகம் ஒரு குறிப்பிட்ட ரிதமில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நம்முடைய உடலிலும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் உண்பது, உறங்குவது உள்ளிட்ட அனைத்தும் இதன்படியே நடக்கிறது. 24 மணி நேரமும் இயங்கும் கடிகாரம் இது. நம்முடைய கண்ணில் இருக்கும் சென்சார் வழியாகத்தான் உடலின் ரிதம் மாற்றியமைக்கப்படுகிறது.

 

தூக்கம் என்பதையே இப்போது நாம் மறந்துவிட்டோம். அதிகாலை நேரங்களிலேயே மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்கிற செய்தியை நாம் படித்திருப்போம். காலை 6 மணி முதல் 8 மணி வரை இது அதிகம் ஏற்படுகிறது. காலை வேளையில் நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மதிய நேரங்களில் மந்தமாகிவிடும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்ய சரியான நேரம். மாலை 6 முதல் 8 மணிக்குள் உங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இருக்கும் நேரம் நாம் தூங்குவதற்கான நேரம்.

 

இரவு 9 மணிக்கு மெலடோனின் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்; அது தூக்கத்திற்கான ஹார்மோன்; நல்ல தூக்கத்தினால் நினைவுத்திறன் அதிகரிக்கும்; ஹார்மோன் சுரப்பு சரியாக இருக்கும்; உடல் பாகங்களுக்கு நல்லது; உங்களுடைய உணர்வுகள் சரியாக இயங்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் இவை அனைத்துமே பாதிக்கப்படும். இரவு நேரத்தில் உடல் தூக்கத்திற்குத் தயாராகும். உணவுக்குத் தயாராகாது. எனவே கடினமான உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கம் கடுமையாக பாதிக்கும்.

 

இரவு 9 மணிக்குத் தூங்கி காலையில் 5 மணிக்கு விழிப்பது தான் நல்லது என்று அறிவியல் கூறுகிறது. முன்னோர்கள் செய்தது அனைத்தையுமே நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அறிவியல் ரீதியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சிறந்தது. நம்முடைய உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதில் நாம் தலையிடவே முடியாது. அவ்வாறு தலையிட்டு அதன் நடைமுறைகளை மாற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். தூக்கமின்மையால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.

 

 

Next Story

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Krithika Tharan | Diet | Nutrition |

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா என்ற நம்முடைய கேள்விக்கு, தான் டயட் சார்ட் கொடுத்த ஒருவரைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

40 வயது பெண்மணி அவருடைய கணவருடன் வந்திருந்தார். தன் குழந்தைகள் தன்னை மதிப்பதில்லை என்று கவலைப்பட்டார். உடல் 100 கிலோவைத் தாண்டி இருந்தது. உடல் குண்டாக இருப்பதாலும் அழகாக இல்லாததாலும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தன் மேலேயே ஒரு தன்னம்பிக்கை இல்லாமல் நிறைய டிப்ரஷனோடு இருந்தார். உடல் அழகை தாண்டி வாழ்க்கை சிக்கல்களால் கூட இருக்கலாம். உணவு மட்டுமே தனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று மூன்று வேளை நன்றாக சுவையாக சமைத்து சாப்பிட்டு உடல் எடை அதிகமாகி 80லிருந்து 100 கிலோ  தொடும் அளவுக்கு போயிருக்கிறார். 

அவர் கணவரும் உடல் இளைப்பதில் தான் சிக்கல் என்று டயட்டிற்காக வந்தார். ஆனால் இந்த பெண்மணிக்கு கூடவே டிப்ரஷன் இருந்தது என்று அவர்கள் வீட்டில் என்னை யாரும் கவனிக்கவில்லை. வயதினால் அவ்வப்போது வரும் இரிட்டேஷன் தான்  என்று சாதாரணமாக விட்டு விட்டனர். ஆனால் இவரோ மருத்துவ சிக்கல் வந்து ஆன்டி டிப்ரசென்ட் மாத்திரை எடுக்கும் அளவு மனப் பிரச்சனை இருந்திருக்கிறது. இதுபோன்ற மாத்திரை ஆரம்பத்தில் எடுக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க போட முடியாது. அதற்கு முதலில் வாழ்வியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இவருக்கு  முதலில் உடல் எடை குறைப்பதில்  கவனம் கொள்ளப்பட்டது.

முதலில் டயட் சார்ட் போட்டுக் கொடுத்தோம். அடுத்து அது கூடவே CBT என்ற Cognetive Behavior Therapy, மெடிட்டேஷன், மூச்சுப் பயிற்சி, உடற் பயிற்சி என எல்லாவற்றையும் தொடர்ந்து கொடுத்து வர அவர் வாழ்க்கையை இயல்பாக பாசிட்டிவிட்டியோடு பார்த்தார். என் பேச்சை யாரும் மதிப்பதில்லை போன்ற எண்ணத்திலிருந்து மிக அழகாக தினசரி வாழ்வையே ரசித்து ஆத்மார்த்தமாக எல்லா பயிற்சியையும் செய்தார். ஒழுக்கமாக கடைபிடித்ததால் சரியாக 100 நாட்களில் 17 கிலோ குறைத்தார். கூடவே சில ட்ரைனிங்குடன் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அந்த கவுன்சிலிங்கினால் தான் இவ்வளவு முயற்சிகள் எடுத்து உடல் எடை தன்னால் குறைக்க முடியும் என்று பார்த்ததும் தன்னம்பிக்கை தானாக பிறந்தது. மேலும் தன்னுடைய குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், எவ்வளவு எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் 40 வயதை ஒட்டித்தான் இருப்பர். எனவே அவர்களோடு ஏற்படாத புரிதலினால் குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்து நிறைய பெற்றோர்கள் டிப்ரசனுக்கு போவதை அதிகம் பார்க்க முடிகிறது. 

உடலை குணப்படுத்த மனம் சீராகும். மனதை குணப்படுத்த உடல் சீராகும். இப்படித்தான் அவருக்கு தெரப்பி, கவுன்சிலிங், உடற்பயிற்சி என்று இரண்டு புறமும் கொடுத்து தேற்ற, அவர் நன்றாக உடலை மாற்றினார். அடிக்கடி தனக்கு ஓவர் திங்கிங் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் ஓவர் திங்க் செய்யும்போது மூச்சை கவனியுங்கள். சிந்திக்கும் விஷயம் பயனுள்ளதாக இருந்தால் தொடர்ந்து சிந்தியுங்கள். தேவையில்லாத சிந்தனை என்றால் விட்டுவிடுங்கள் என்று சிறு சிறு டிப்ஸ் கொடுத்து அவரை சரி செய்தோம். உடல் எடை அதிகம் இருக்கிறது என்பது ஆரோக்கியமற்ற செயல்தான். அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அதற்கு தாழ்வு மனப்பான்மை கொள்வது சரியாகாது. பொதுவாக பெண்களுக்கு முக்கியமாக 40 வயதிற்கு பின் உடல் எடை கூடுவது போன்ற தொந்தரவு பல காரணங்களால் வரலாம்.

சில பேருக்கு குழந்தை பிறந்தவுடன் அதை குறைக்க முடியாமல் போகலாம். சில பேர் பாலூட்டும் போது நிறைய சாப்பிட்டு விடுவர். அதை குறைக்க முடியாமல் போகலாம். சத்து குறைபாட்டினால் அடிக்கடி பசி எடுத்து தவறான உணவுகளை எடுப்பதினால் வரலாம். நரம்பு பிரச்சனை, ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும்  வீட்டில் இருக்கும் சில பிரச்சினைகளால் கூட டிப்ரஷன் அதிகமாகி உடல் எடை போடலாம். சின்ன சின்ன ஸ்டிரஸ் லெவல்கள் வாழ்க்கையில் இயல்புதான். அதனால் நொந்து போகாமல் துணிவோடு செய்யும் போது எல்லாமே சாத்தியம். உடல் எடையோ எந்த தொந்தரவோ எதுவானாலும் அவர்களுக்கு துணிவையும் தன்னம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். அடுத்து அந்த பிரச்சனையை சரி செய்ய அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

Next Story

ஒழுங்காக தூங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Dr Arunachalam | Insomnia |

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான்  செய்கிறது. அமெரிக்க மனநல சங்கத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள்  தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிபட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்கமின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், பற்றி மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடன் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.. 

தூக்கமின்மையால் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் பாதிப்படைய பெரிய காரணங்கள் என்ன ? அதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள்  வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் செல்போன்க்கு ரீச்சார்ஜ் செய்வது போன்று. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை  வருகிறது. 

நான் 1994ல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், நைட் ஷிப்ட் , ஐ .டி  நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின்மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது. தண்ணீரை எவ்வாறு முறைப்படுத்தி காய்ச்சி குடிக்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு எடுத்துரைக்கும்போதே, இவ்வாறு அனுப்பிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு நோயாளிகளே வரமாட்டார்கள் என்று என்னிடம் கருத்துகள்  வந்தது. இது இல்லையென்றால் இன்னொரு நோய் வரும் என்று பதிலளித்தேன். அதுபோல இப்போது பொது வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அது சிறுநீர் கல் பிரச்சனைகளுக்கு வழிசெய்து, மருத்துவமனைக்கு சென்று அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் என்னதான் கற்பித்தாலும், அது வேறொரு பாதையைதான் சென்று அடைகிறது. தூக்கமின்மை நோயாளிகளை அதிகமாக இன்று பார்ப்பது  போல் 1994ல் பார்த்தது இல்லை. காலத்திற்கேற்ப, மனிதன் தன் உடலை புரிந்துக்  கொள்ளாத வரைக்கும் நோய்  வந்து கொண்டே இருக்கும். 

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின்  கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும்.  எப்படி காலை, மாலை என்று இரு வேளையும்  சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப்  போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள். நம் உடலே இயற்கையின் ரிதமோடு ஒன்றியது தான். சூரியனால் உதயமாகும் மலர்கள் முதல், கண்கள் தெரியும் விலங்குகள் வரை,  சூரியன் உதித்தலோடு வாழ்க்கையை தொடர்ந்து, சூரியன் மறையும் வரை முடித்து 12 மணி நேரம் ஓய்வெடுக்கும் வகையாகத்தான், நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. 

தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத  பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மரணங்கள் அதிகமாக உலகில் காணப்படுவதற்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே  பெருமளவு காணப்படுகிறது. இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல்  இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு  இருக்கலாம்.  

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திருமணமான பெண்களையும் , ஆண்களையும் இது மிகவும் பாதித்தது. இரவெல்லாம் அலுவலகத்தில் மேலாளரோடு வேலை நிமித்தமாக வாக்குவாதம் செய்கிறார்கள் என்றெல்லாம் பாதிக்கப்பட்ட  அவரவர் தந்தைமார்கள் என்னிடம் கூட்டி வருவார்கள். இதுபோன்று காலகட்டத்தில் உழைக்கும்போதும், குறிப்பாக கல்வியும் இதில் முக்கிய பங்காக இருக்கிறது. என்னைப்பொறுத்த வரை ஒரு தொழிலை செய்வதற்கு அவனின் ஈடுபாடு தெரிந்து வாய்ப்பை தருவதே முக்கியமானதாக இருக்க முடியுமே தவிர்த்து, மனப்பாடம் செய்து வென்று ஒரு சமுதாயத்தில் நல்ல தொழில் வல்லுநராக இருப்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. 

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் சமீப காலத்தில் நிறைய பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்து கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான  தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.