Skip to main content

சர்க்கரை வியாதி வரக்கூடாதா? கட்டாயம் விரதம் இருங்க!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Can't get diabetes? Be sure to fasting!

 

கடவுள் நம்பிக்கையால் பலர் விரதம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் என்னென்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார் 

 

ஒரு காலத்தில் குளிர்காலங்களில் குகைக்குள் மறைந்து ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர். உணவு கிடைக்காதபோது உபவாசம் இருப்பது அப்போது சாதாரண விஷயம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் விரதம் இருக்கும் முறை இருக்கிறது. ஆறு நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருக்கும் சஷ்டி விரத முறை தமிழர் மரபில் இருக்கிறது. அனைத்து வகையான மருத்துவங்களிலும் விரதம் இருக்கும் முறை இருக்கிறது.

 

அறிவியல் ரீதியாகவும் விரதம் இருப்பது நல்லது என்று சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. உடல் தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தின்று செரிப்பதே விரதத்தின் போது நடக்கிறது. தேவையில்லாத வைரஸ், பாக்டீரியாக்கள் விரதத்தின் போது நீக்கப்படுகின்றன. கேன்சர் செல்களும் இதன் மூலம் குணப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. தேவையான உப்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டு உணவு உண்ணாமல் 30 நாட்கள் வரை இருக்க முடியும். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது.

 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும் விரதத்துக்கு உண்டு. விரதத்தின் மூலம் இளமையான உடல் தோற்றம் உருவாகும். 72 மணிநேரம் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு. விரதத்தால் சில பின்விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது. விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் விரதத்தால் கேன்சர் நோய் குறைவாக இருக்கிறது.

 

விரதத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். விரதம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. நம்முடைய மனத்தால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விரதம் மூலம் நாம் உணரலாம். விரதத்தின் போது தண்ணீர், உப்பு, சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மாதம் ஒரு முறை மட்டும் விரதம் இருப்பது சரியானது என்பது என்னுடைய கருத்து. விரதத்தால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் வாய்ப்புகள் அதிகம். விரதத்தால் நன்கு தூக்கம் வரும். மறதி குறையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை விரதத்தினால் நன்மைகள் உண்டு.

 


 

Next Story

மன அழுத்தம் குடல் எரிச்சலை உண்டாக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Kiruthika tharan - Irritable Bowel Syndrome -  Explained 

ஐ.பி.ஸ் எனப்படும் Irritable Bowel Syndrome நோயைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

ஐ.பி.எஸ்  என்று Irritable Bowel Syndrome என்பது அல்சர் வழியில் வரும். இந்த ஐ.பி.எஸ் அலசரேட்டிவே கொலட்டிஸ் (ulcerative colitis) அண்ட் குரோன் (Crohn's disease) என இரண்டு விதமாக இருக்கிறது. தாங்க முடியாத அல்சருடன் ஒரு கிளையண்ட் வந்தார். எந்த நோயாக இருந்தாலும் முதலில் ஸிட்ரெஸ் அளவு தான் பார்க்கப்படும். சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் என்று ஒன்று ஸ்டிரெஸ் ஃபேக்டரை கண்டுபிடிக்க இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு 20க்கு 14 முதல் 18 வரை தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியில் கொண்டுவர சைக்கோ தெரப்பி கொடுத்து மாற்ற வேண்டும்.

அல்சரினால் வயிறு பகுதி மட்டும் புண்ணாக இல்லாமல் ஐபிடியை பொறுத்தவரைக்கும் மலக்குடலிலும் காயமாக இருக்கும். சில இடங்களில் புண்ணாகி தொற்றாக மாறிவிடும். சில சமயம்  h. Pylori என்ற ஒரு இன்ஃபெக்ஷன் கூட இருக்கும். சர்ஜரி அளவிற்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொண்டு உடனேயே சரி பார்த்துவிட வேண்டும். நாமாக மருந்து மற்றும் டயட் என்று போவதை விட மருத்துவரை அணுகுவது மிக சிறந்ததாக இருக்கும். இந்த கிளையண்ட் தன்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று அவரே சொன்னார். இவர் அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நிறைய சிக்கல்களினால் அலுவலில் தினசரி ஸ்ட்ரெஸ் என்றார். எனவே அவருக்கு ஸ்லோ சைக்கிளிக் போன்ற எக்ஸர்சைஸ் கொடுக்கப்பட்டது. வயிறு உப்புசம், புண் இருந்தால் இரவு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். உடனடியாக மோஷன் போவார்கள். எதையும் உடனே சாப்பிட முடியாது. அடிக்கடி வயிறு அதிகமாக வலிக்கும். மேலும் சில சமயம் மோஷனில் ரத்தம் கூட இருக்கும். அவருக்கு வாழ்வியல் மாற்றம் தான் முதலில் அளிக்கப்பட்டது. புரோ பயோடிக் உணவை கொடுத்து அவருக்கு ஐ.பி.டியை தூண்டும் உணவுகள் தடை செய்யப்பட்டது. சூப்பில் இருந்து எந்தெந்த காய்கள் ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் கொடுத்தோம். ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

மேலும் பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் என்ற கெமிக்கல் கூட பிரச்சினை கொடுக்கும் என்பதால் சில பழங்களும் தவிர்த்தே டயட் கொடுக்கப்பட்டது. வயிறு புண்ணாகி வலி இருந்ததினால் வெயிட் லிப்டிங் செய்து குறிப்பாக அப்ஸ் வொர்க் அவுட் செய்து அதன் பிறகு அவர் உடலிற்கு ஏற்ப ப்ரோட்டினை கொடுத்தோம். சிலருக்கு முளை கட்டிய பயிறுகள் கூட ஒத்துக் கொள்ளாது. அதனால் வேக வைத்த சிக்கன் பீஸ் கூட எடுக்கலாம். 

இப்படி டயட் மாற்றம் செய்து தூக்கத்தை முதலில் சரிப்படுத்தினோம். தூக்கத்தை நெறிப்படுத்த மொபைல் போனை குறைப்பது தான் முதற்கட்ட வழி. அதிலும் தூங்குவதற்கு முன்பு எந்த மறுநாள் குறித்த கவலை எதுவும் இல்லாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். சிலர் நடக்கப்போகும் விஷயத்தை யோசித்து யோசித்து தூங்காமல் இருப்பர். ஆனால் நன்றாக தூங்கினாலே மூளை நன்றாக வேலை செய்து அந்த பிரச்சனைக்கு தீர்வை தானாக கொடுக்க முடியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வரும்போது கொடுக்க கூடாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இதுவே பெரியவர்களுக்கு வரும்போது முழுமையாக சாப்பிடக்கூடாததை தவிர்த்து விட்டு புது உணவுகளை அப்பொழுதே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அந்த கிளைண்டுக்கு நிறைய வாழ்வியல் மாற்றத்தை கொடுக்க ஒரு 60லிருந்து 70% ஓரளவுக்கு சரியாகி வந்தார். மோசமான தொந்தரவு இல்லாமல் ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிகிறது. 

Next Story

சிறு வயதில் வரும் ஃபேட்டிலிவர் பிரச்சனைக்கு தீர்வு? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Kirthika Tharan | Nonalcoholicfatty |

17 வயது பையனுக்கு உடல் எடையோடு இருந்த நான் - ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் அளவைக் குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

வெளிநாட்டில் இருக்கும்  17 வயது பையனுக்கு உடல் எடை அதிகமாகி கூடவே நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் இருந்தது. அதிக உடல் எடை அவனுடைய லிவரில் போய் கொழுப்பாக தங்கி இருந்தது. இதுவே சிம்பிள் லிவர் பேட்டி என்றால் லிவர் கெட்டுப் போகாது. நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்போது அது லிவரை பாதிக்கும். இந்த ஃபேட்டி லிவரை எந்த ஸ்டேஜ்ஜில் உள்ளது என்று பிளட் ரிப்போர்ட் மூலமும், லிவர் என்சைம் மாறுபாட்டை அல்ட்ரா சவுண்ட் வைத்து உணரலாம். நிறைய உடல் எடை அதிகம் உள்ள நோயாளிகள் ஏற்கனவே 20 சதவீதம் லிவர் பாதிப்புடன் தான் இருப்பார்கள்.

முதலில் குழந்தைகளுக்கு ஸ்டிரெஸ் அதிகமாக பெற்றோர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். சர்க்கரை சாப்பிடக்கூடாது என்றால் உடனே பெற்றோர்கள் எந்த சுகரும் பழங்களும் கொடுக்காமல் நிறுத்தி அவர்களுக்கு கிரேவிங்கை தான் அதிகப்படுத்துகின்றனர். அந்த பையன் அதிகமாக சாக்லேட் வகைகள், சாதம் , பலகாரம் போன்றவை அதிகம் எடுத்திருக்கிறான். முதலில் ஃபேட்டி லிவருக்கு சாக்லேட் தான் அதிக பாதிப்பை கொடுக்கும்.  அந்த பையன் இருந்தது மிடில் ஈஸ்டர்ன் பக்கம். வெதர் சரியாக இல்லாததால் வீட்டில் சரியான உடற்பயிற்சி நிபுணர் வைத்து வீட்டிலேயே ஆக்டிவிட்டீஸ் கொடுக்கப்பட்டது. பேக்கரி ஐட்டம் சாக்லேட் என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு டிடாக்ஸ் டிரிங், வாட்டர் தெரபி உட்பயிற்சிகளையும் கொடுக்கும் போது ஆரம்ப நிலையிலே நன்றாக அந்த ஃபேட்டி லிவர் பாதிப்பு குறைவதை பார்க்க முடிந்தது. 

இந்த ஃபேட்டி லிவர் ஓரளவு தான் ரிவேர்சபில். நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு நம் லைஃப் ஸ்டைல், தூக்கம், உணவு முறை மூலமாக ஓரளவு குறைக்க முடியும். இதுவே ஆல்கஹாலிக் வகை என்றால் கண்டிப்பாக மது பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதுவே வெறும் சாதாரண ஃபேட்டி லிவர் என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். கொழுப்பை நேரடியாக எடுக்காவிட்டாலும் நம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாகவும் மாறும். எனவே கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரையும் குறைத்து அதிகமாக தண்ணீரை எடுக்க வேண்டும். அதன் மூலமாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதை முறையாக கடைப்பிடித்ததன் மூலம் அந்த சிறுவன் நன்றாக உடலையும் குறைத்து ஒபிசிட்டி தொந்தரவில் இருந்தும் வெளிவந்து ஃபேட்டி லிவர் தொந்தரவு நீங்கி நன்றாக சரியானது.