Skip to main content

உலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து மறைந்துள்ளன. அவை நீர் வாழ்வனவாகவும், நிலத்தில் வாழ்வனவாகவும் இருந்தன. கற்பனைக்கு எட்டாத வகையில் பிரமாண்டமான உருவத்துடனும், உயிருக்கு அச்சுறுத்தலாகவும் அவை வாழ்ந்திருக்கின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே அவை பூமியின் பிரளயத்தில் மறைந்துவிட்டன. அத்தகைய விலங்குகளின் மிச்சங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றின் மிச்சங்களை வைத்து உருவகப்படுத்தும்போது அவற்றின் பிரமாண்டம் நமக்கு தெரியவருகிறது. அத்தகைய கொடூரமான விலங்குகளில் 18 வகையான விலங்குகளை இங்கே நாம் பார்க்கலாம்.

 

h

 

 

ஹெலிகாப்ரியன்!


 

இதன் பெயர் ஹெலிகாப்ரியன். இது ஒரு கொடூரமான விலங்குதான். இதன் பற்கள் தாடைகளில் பொருந்தாது. ஆனால், சக்கர வடிவில் வளர்ந்திருக்கும். அந்த பற்கள் இரையை உண்பதற்காக கீழ்தாடையில் பொருந்தும் என்று கருதப்படுகிறது. பல் சக்கரத்தில் சிக்கிய கரும்பு பிழியப்படுவதைப்போல இந்த விலங்கின் பற்கள் உணவை உண்ணும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் உருவம் எப்படி இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்த விலங்கின் பற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பெர்மியன் ட்ரையாஸிக் காலத்தைச் சேர்ந்த, அதாவது சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விலங்காக இது கருதப்படுகிறது.

 

 

ee

 

எடஸ்டஸ்!


 

ஹெலிகாப்ரியனைப் போலவே, எடெஸ்டஸ் எனும் இந்த டினோ ஷார்க்கின் உண்மையான உருவமும் முடிவாகவில்லை. இந்த விலங்கிற்கும் நிரந்தரமான பற்கள் இல்லை. புதிய பற்களையும் ஈறுகளையும் உடனடியாக வளர்த்து, பழைய பற்களையும் ஈறுகளையும் முன்னோக்கி தள்ளி பற்களை வெளியே சுருளாக காட்டும் என்று சில விஞ்ஞானிகள் உருவகப்படுத்தினார்கள். வேறு சிலர் அச்சுறுத்தும் வகையிலான பற்களைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்…

 

 

tt

 

டைட்னோபோவா!

 

6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோஸர்கள் அழிந்தபிறகும், டைட்டனோபோவா என்ற கொடூரமான உயிர்க்கொல்லி பாம்பு இருந்தது. 50 அடி நீளமும், சுமார் ஒன்றரை டன் எடையும் கொண்ட இந்த பாம்பு தனது இரையை விழுங்கி செரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

 

pp

 

 

பயங்கரமான கடல் தேள்!


 

5 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய துடுப்பு போன்ற கடல் தேள் 46 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலடியில் உலவியிருக்கிறது. பென்டெகோப்டெரஸ் டெகோரஹென்ஸிஸ் என்ற பெயருடைய இந்த தேளின் படிமம் 2015 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றும் இந்த தேளின் மிச்சமாக உண்ணிகள், சிலந்திகள், கடல் நண்டுகள் வாழ்கின்றன.

 

 

mm

 

 

தட்டாம்பூச்சி!
 

தட்டாம்பூச்சிகள் எப்போதுமே ஆபத்தில்லாதவை. அவற்றின் இறக்கைகள் இரண்டு அங்குலம் மட்டுமே இருக்கும். ஆனால், தட்டாம்பூச்சியின் மூதாதையான மெகநியூரா என்ற பெரிய தட்டாம்பூச்சியின் இறக்கை வியப்பூட்டுமளவுக்கு இரண்டு அடி பரந்து விரிந்திருக்கும்.

 

dd

 

 

தனது இனத்தையே உண்ணும் மீன்!
 

 

36 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் இப்படி ஒரு மீன் வாழ்ந்திருக்கிறது. 30 அடி வரை வளரக்கூடிய இது, தனது இனத்தைச் சேர்ந்த மீனைத்தான் உணவாக கொள்ளும். இதன் வாய் கண்ணிமைக்கும் வினாடியில் திறந்து இரையைக் கவ்வி விழுங்கும் வகையில் அமைந்திருந்தது. டன்க்ளியோஸ்டியஸ் என்று பெயரிடப்பட்ட இதுவும் ஒரு ஆபத்தான விலங்காகவே கருதப்படுகிறது.

 

y

 

 

டைனோசரை கொல்லும் முதலை!


 

மிகப்பெரிய டைனோசரையே இழுத்து கொல்லும் அளவுக்கு 35 அடி நீளத்துக்கு வளர்ந்த ஆபத்தான முதலையின் படிமம் வட அமெரிக்காவில் கிடைத்துள்ளது. டெய்னோசுச்சுஸ் என்று பெயரிடப்பட்ட இந்த முதலையிடம் கடிபட்ட டைனோசர்களின் படிமங்களும் கிடைத்துள்ளன.

 

 

pp

 

 

காளை வடிவ எலி!
 

 

காட்ஸில்லா என்ற விலங்கை வைத்து வந்த படத்தை பார்த்திருப்போம். 10 அடி நீளமும், 5 அடி உயரமும் உள்ள எலியை விஞ்ஞானிகள் ரேட்ஸில்லா என்று அழைக்கிறார்கள். தாவர உண்ணியான இதற்கு போபெரோமிஸ் பேட்டெர்ஸோனி என்று பெயரிட்டுள்ளனர். நீளமான கால்களைக் கொண்ட இந்த எலிகள் ஒரு காளை மாடு அளவுக்கு பெரிதாக இருக்குமாம். அப்படியானால் இது கடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

 

aa

 

 

பயங்கரமான இரால்!

 

பொதுவாக நாம் பார்த்திருக்கிற இரால் புழு மாதிரி இருக்கும். மெல்லிய மேலோடுகளை பிரித்தெடுத்துச் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்த இரால் மிகவும் பயங்கரமானது. ஆறு அடி நீளத்தில் நீளமான வளைந்த கொம்பு போன்ற அமைப்புடன் வாழ்ந்திருக்கிறது. அந்த கொம்பு போன்ற அமைப்பில் பற்கள் இருக்கின்றன. நீர்வாழ் உயிரினங்களை அது அந்த கொம்புகளை புரட்டிப்போட்டு கவ்விக்கொள்கிறது. இதன் அறிவியல் பெயர் அனாமலோகேரிஸ்.

 

 

ss

 

 

குட்டை முக கரடி!


 

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இது கலிபோர்னியா பகுதியால் வாழ்ந்திருக்கிறது. தற்போது காணப்படும் துருவ கரடியைப் போல இன்னொரு மடங்கு பெரியது. சுமார் 12 அடி உயரம் இருக்கும். தினமும் 17 கிலோ இறைச்சி தேவைப்படும் இந்த பயங்கர கரடியின் அறிவியல் பெயர் ஆர்க்டோடஸ்.

 

mm

 

 

மெகாபிரன்ஹா!


 

பயங்கரமான மீன் இது. 1 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இதற்கு இரண்டு வரிசையாக பற்கள் இருக்கும். மூன்று அடி நீளம் இருந்த இந்த மீனைப் போன்ற சிறியவகை மீன்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இந்த மீன் ஆட்கொல்லி வகையைச் சேர்ந்தது.

 

 

ss

 

 

படுபயங்கர சுறா!
 

 

இப்போது கடலில் வாழ்கிற சுறா மீன்களைப் போல பல மடங்கு பெரிதான பயங்கர ஆட்கொல்லி சுறாக்கள் கடலில் வாழ்ந்து மறைந்திருக்கின்றன. 60 அடி நீளம் வரை வளர்ந்த அந்த பயங்கர சுறாக்களின் வாய் அளவை ஒரு அறிவியலாளர் இப்போதைய சுறாக்களின் வாய் அளவோடு ஒப்பிட்டு நிற்பதைப் பார்க்கலாம். அதிலிருந்தே அந்த சுறாக்களின் பயங்கரத்தன்மையை உணரலாம்.

 

gg

 

 

பத்தடி உயர பயங்கர குரங்கு மனிதன்!


 

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் வாழ்ந்த குரங்கு மனிதனை ஜிகாண்டோபிதிகஸ் என்று அழைக்கிறார்கள். 10 அடி உயரத்தில் நமது தற்கால மனிதக் குரங்கு, ஒராங்குட்டான்களுக்கு மூதாதையராக இவை கருதப்படுகின்றன. சைவ உணவை உட்கொண்டதாக கூறப்படும் இவற்றில் ஆண் இனத்தைச் சேர்ந்தவை அசைவத்துக்கு மாறியிருக்கின்றன.

 

 

mm

 

 

குழந்தையைச் சாப்பிடும் கழுகு!


 

வானத்தில் வட்டமிடும் கழுகு திடீரென்று கீழ்நோக்கி வந்து கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்வதை பார்த்திருக்கிறோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து தீவின் தெற்கு பகுதியில் குழந்தைகளையே தூக்கிச் செல்லும் அளவுக்கு ராட்சத கழுகு இனம் இருந்திருக்கிறது. 16 கிலோ எடையுள்ள அந்த கழுகின் ஆபத்து கருதி, நியூசிலாந்தின் மவோரி பழங்குடியினர் அவற்றை கொன்று ஒழித்து விட்டனர் என்கிறார்கள். அந்தக் கழுகை மோவா என்று அழைத்தனர்.

 

 

mm

 

 

நெருப்பைக் கக்கும் டிராகன்!
 

 

ஆஸ்திரேலியாவில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்த மெகலானியா என்ற டிராகன் வகை பார்க்கவே பயங்கரமாக இருந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் இத்தகைய டிராகன்களை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 18 அடி நீளமும், 650 கிலோ எடையும் கொண்ட இந்த டிராகன் கோமொடோ டிராகன் வகை விலங்குகளுக்கு உறவு என்று கூறப்படுகிறது.

 

 

tt

 

 

நடுங்க வைக்கும் கழுகு!

 

20 இறக்கை நீளமும், ஆறடி உயரமும் கொண்ட பயங்கரமான கழுகு சரித்திர காலத்துக்கு முன் வாழ்ந்து மறைந்திருக்கிறது. அர்கவன்டிஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இது கால்நடை மந்தைகளை வேட்டையாடி உண்ணும் என்கிறார்கள்.

 

 

tt

 

 

பயங்கரப் பறவைகள்!

 

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தப் பறவைகள் 10 அடி உயரத்துக்கு வளரக்கூடியவை. உணவுக்காக இவை தங்களுடைய வலுவான அலகால் விலங்குகளை கொத்திக் கொல்லுமாம். விலங்குகளின் மண்டை ஓட்டையே சிதறடிக்கும் அளவுக்கு கூர்மையாகவும் வலவாகவும் இவற்றின் அலகு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 

 

 

 

 

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

ஒட்டகங்கள் சித்ரவதை; விலங்கு பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

torture of camels; Officials inspect animal farm in Sulur

 

கோவையில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அங்கிருந்த பல்வேறு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒட்டகம் ஒன்றை சிலர் தாக்கி துன்புறுத்தும் காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் அது கோவையில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை சூலூரில் இயங்கி வந்த சங்கமித்ரா என்ற விலங்கு பண்ணையில் இந்த கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது.

 

அந்த விலங்கு பண்ணையில் சட்டவிரோதமாக விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. உடனடியாக விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காட்சிப்பொருளாக பயன்படுத்த ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதி இல்லாமல் அடைத்து வைத்ததாக தெரியவந்தது. இந்த சோதனையில் ஐந்து ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் விலங்கு நல வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட ஒட்டகங்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.