Skip to main content

மாணவர் வழிகாட்டி: உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்! #12

Published on 22/08/2020 | Edited on 27/08/2020
Lot of employment opportunity in nursing courses

 

பொது மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சந்தையில் எப்போதும் தேவை இருந்து வருகிறது. பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்புதான். எனினும், சில பணிகள் வெறுமனே வேலை என்பதை தாண்டியும் மன நிறைவைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும். அதில், நர்சிங் (செவிலியர்) பணிக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. 

 

செவிலியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் சேவை செய்கின்றனர் என்று சொல்வதுதான் சாலப் பொருந்தும். ஒரு நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் என்பவர் கிட்டத்தட்ட பாதி மருத்துவருக்கு சமம். வாழ்கின்ற நைட்டிங்கேல் மட்டுமின்றி, வாழ்கின்ற தெரசாக்களும் கூட செவிலியர்கள்தான் என்றால் மிகையாகாது. 

 

கிழக்கிந்திய கம்பெனிகளின் வருகைக்கு பிறகே இந்தியாவில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் உருவாகத் தொடங்கினர். அதனால், இத்துறையில் கிறித்தவ பெண்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். இன்றைய நிலையில், ஆண்களும் செவிலியர் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டினாலும்கூட, இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது என்னவோ பெண்கள்தான். அவர்களுக்கு ஏற்ற துறைகளுள் நர்சிங் படிப்பும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

Lot of employment opportunity in nursing courses


நர்சிங் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளை கண்காணிப்பதில் இருந்து, தரமான செவிலியர்களை உருவாக்குவது வரை இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council - INC) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஎன்சி, நோயாளி - செவிலியர் விகிதாச்சார கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மூன்று நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள ஒரு செவிலியர் தேவை என்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமே உடனடியாக 4 லட்சம் செவிலியர்களுக்கு பணித் தேவை இருக்கிறது, என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

 

இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் செவிலியர்கள் அரசு மற்றும் அதைச் சார்ந்த மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியால் செவிலியர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஹோம் நர்சிங், இண்டஸ்ட்ரியல் நர்சிங் என செவிலியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. தவிர, வளைகுடா நாடுகள், இந்திய நர்சுகளுக்கு கைநிறைய சம்பளத்தை கொடுத்து பணிக்கு அமர்த்தி கொள்கின்றன. கேரளாவில் உருவாகும் நர்சுகளில் கணிசமானோர், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவது இப்போதும் தொடர்கிறது. 

 

இப்படி எல்லா காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த செவிலியர் படிப்பில் சேர்வது எப்படி, அதற்கான பயிற்சி மையங்கள், படிப்பின் கால அளவு உள்ளிட்ட தகவல்களை இனி பார்க்கலாம். 


படிப்பின் விவரம்: 

B.Sc., Nursing - 4 Years 

B.Sc., (Honors) Nursing - 4 Years 

Bsc (Post Basic) Nursing - 4 Years 

Diploma in Nursing and Midwifery - 3 Years 

Diploma in Ayurvedha Nursing and Pharmacy - 2 1/2 Years 


 

கல்வித்தகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.

 

மத்திய அரசு செவிலியர் கல்லூரிகளில் சேரும் நடைமுறை: 

1. எய்ம்ஸ் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதன் விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மத்திய அரசின் செவிலியர் கல்லூரிகள் புது டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிசிகேஷ் ஆகிய இடங்களில் உள்ளன. (AIIMS–All India Entrance Test – www.aiimsexams.org.
(New Delhi, Bhopal, Bhubaneswar, Jodhpur, Patna,
Raipur, Rishikesh).


2. ஜிப்மர் நுழைவுத்தேர்வு - கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


3. நேஷனல் இன்ஸ்டிடியூப் ஆப் ஆயுர்வேதா, ஜெய்பூர் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதுகுறித்த விவரங்களுக்கு: www.nia.nic.in (National Institute of Ayurvedha, Jaipur- All India
Entrance Exam – www.nia.nic.in)


4. Armed Forces Medical College, Pre-medical Test – Pune www.afmc.nic.in


5. 5. Health Education and Research Council of India – www.herci.in

 

 

தமிழக அரசின் செவிலியர் கல்லூரிகளில் சேருவதற்கான நடைமுறை: 

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு மூலமாக பிளஸ்-2வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் செவிலியர் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும்.

 

இணையதள முகவரி:  www.tnhealth.org

 

செவிலியர் கல்லூரிகள் எண்ணிக்கை: 

1. அரசு செவிலியர் கல்லூரிகள் - 15 (சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன).


2. தனியார் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கை - 156


3. சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை - 6

 

கல்வியின் பயன்பாடு: 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றலாம். எம்.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட உயர்கல்வியும் படிக்கலாம். நர்சிங் பயிற்சி முடித்தோருக்கு வெளிநாடுகளில் எப்போதும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

 

ஸ்டாஃப் நர்ஸ், உதவி செவிலியர் கண்காணிப்பாளர், துணை செவிலியர் கண்காணிப்பாளர், வார்டு சிஸ்டர், வார்டு கண்காணிப்பாளர், செவிலியர் பயிற்சி மைய இயக்குநர், நகர்ப்புற சுகாதார செவிலியர் என பல நிலைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

 

செவிலியர் படிப்பை முடித்தவுடனேயே உள்ளூரிலேயே முன்னணி தனியார் மருத்துவமனைகளில் 7000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான ஊதியத்தில் பணி வாய்ப்பை பெறலாம். 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னணி மருத்துவமனைகளில் 20,000 ஆயிரம் முதல் 30,000 ரூபாய் வரையிலும், கூடுதல் அனுபவம் மிக்கவர்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் ஊதியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

 

 

Next Story

ஆளுநர் நிகழ்ச்சி; கட்டாயம் பங்கேற்க மாணவர்களுக்கு மிரட்டல்!

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Governor's Program Intimation of students to participate

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல் விடுத்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (28.01.2024) நாகைக்கு செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும். இன்று மாலை 06.30 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அதிகாலை 06.30 மணிக்கே வர வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்தீப்பீர்கள். வருகை பதிவேட்டில் கைப்பேன் என மாணவ மாணவிகளுக்கு நர்சிங் கல்லூரி முதல்வர் இளவேந்தன் மிரட்டல் விடுத்துள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏறபடுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இந்த நர்சிங் கல்லூரி நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

செவிலியர் மாணவி கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Nursing student lost their life in the toilet

 

திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி, எஸ். கே. சி. நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலித்தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில்  இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  

 

தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீரென தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

 

இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காகத்  தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.