Skip to main content

குழந்தைகளின் கூகுள்

Published on 12/03/2018 | Edited on 13/03/2018

இன்றைய தலைமுறை இணையம் இல்லாமல் இருக்க முடியாது. உலகம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் நாமும் சரி, நம் குழந்தைகளும் சரி ஈடுகொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இணையம் அவசியம். இதில் மாற்றுக்கருத்து இருக்காது. குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் அவர்களின் அறிவை வளர்க்க நாம்தான் உதவி செய்ய வேண்டும். "நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுவீங்க, குழந்தை பாக்கக் கூடாதத பாத்துருச்சுனா, தப்பா எதாவது வந்துருச்சுனா, இந்த வயசுலேயே பேஸ்புக் பாக்க ஆரம்பிச்சா என்ன பண்றது" என்று  கேட்பவர்களுக்கு, "நாங்க இருக்கோம்" என்று கூகுள் கொண்டுவந்ததுதான் கிடில் (kidle.com). இது பலநாட்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், இந்தியாவில்  இதை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை.  

kidle.com

நீங்கள் இதில் தலைகீழாக நின்று தேடினாலும் ஆபாசம் சார்ந்த எதுவும் (sexual contents) பார்க்க முடியாது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தவிதமான சமூக ஊடங்களுக்கும், கூகிள், யூடூயூப் போன்ற பிரபலமான பக்கங்களுக்கும் இந்த வலைத்தளத்திலிருந்து செல்ல முடியாது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு தேவை இல்லாதவற்றை பார்க்க இயலாது. இதில்வரும் விவரங்கள் யாவும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  கடினமான ஆங்கில வார்த்தைகள் இதில் இல்லாமலும், மிகநீளமாக, பத்தி பத்தியாக இல்லாமல் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு சுருக்கமாகவும் இதில் தரவுகள் தரப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் தேவையில்லாத, அதிகளவு  கருத்துக்களை தவிர்த்துவிடுகின்றனர்.

குழந்தைகளை தைரியமாக இதில் உலாவ விடலாம் அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் அருகிலிருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை என்றாலும், அவர்களுக்கு அருகில் நீங்கள் இருக்கும்போதுதான் குழந்தைகள் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.