Skip to main content

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? மனதின் நூலகம்!!!

Published on 28/06/2018 | Edited on 08/07/2018

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

நிமோனிக்ஸ் (Mnemonics):

நிமோனிக்ஸ் என்பது நினைவாற்றல் பயிற்சிக்கு உதவும் வழி. கிரேக்க பெண் கடவுள் நிமோசின் என்ற பெயரில் இருந்து நிமோனிக்ஸ் என்ற சொல் வந்தது. நிமோனிக்ஸ்சை நினைவுபடுத்திக் கொள்ள உதவும் வழி அல்லது நினைவாற்றலை அதிகரிப்பதற்கான விதி என்று கூறலாம்.

 

brain


 

சுருக்கமாக விளக்க வேண்டும் என்றால், நாம் ஆங்கில மாதங்களுக்கு எத்தனை நாட்கள் என்பதை எளிதில் அறிவதற்கு, கை விரல்களை மடக்கி, மேட்டுப் பகுதியில் வரும் மாதத்திற்கு 31 நாட்கள் என்றும், பள்ளப் பகுதியில் வரும் மாதத்திற்கு 30 நாட்கள் என்றும் நினைவு படுத்துவோம் அல்லவா, அதுபோன்ற எளிதான வழிகளைத்தான் நிமோனிக்ஸ் என்கிறார்கள்.

 

உங்களது மனத்தில் அழுத்தமாகப் பதியாத எந்த விஷயத்தையும் மீண்டும் நினைவு படுத்துவது சிரமம். ஞாபக சக்தி இல்லாத மனிதன் தன்னை வெளிப் படுத்தும் திறனையும் பெருமளவில் இழந்து விடுகிறான். அதே சமயத்தில் துல்லியமான ஞாபக சக்தி இருந்தால், அது, ஒரு மனிதனுக்கு வெற்றிக்கான அனைத்துக் கதவுகளையும் மிக எளிதாகத் திறந்து விடும்.

 

 

 

நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களுக்குத் தன்னம் பிக்கையும் அதிகம் இருக்கும். ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருப்பதற்கு அந்த விஷயத்தின் மீது ஆர்வம் இருப்பது அவசியம். அதேபோல, குறிப்பிட்ட விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பமும் அவசியம்.

 

லுசியஸ் சிபியோ என்பவர் ரோம் நகரத்தில் இருந்த அத்தனை பேரின் பெயர்களையும் நினைவில் வைத்திருந் தாராம். ஒரு நிறுவனத்தின் மேலாளர், தனக்குக் கீழே பணியாற்றும் அனைவரையும் பெயர் சொல்லியே அழைப்பார். அவருக்குக் கீழே 500 பேர் பணியாற்றினார்கள். அத்தனை பேரின் பெயரையும் அவர் நினைவில் வைத்திருந்தார். நிறைய விஷயங்களை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர கொண்டுவர உங்களது நினைவாற்றல் அதிகரித்துக் கொண்டே போகும்.

 

நினைவாற்றலுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருக்க வேண்டும் என்பதைப் போலவே, நாம் பார்க்கும் அல்லது படிக்கும் அல்லது கேட்கும் விஷயங்களுடன் மனம் ஒன்ற வேண்டும். ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனிக்கும்  போது அந்த விஷயம் நன்கு மனத்தில் பதியும். பிறகு அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது சுலபம்.

 

 

 

ஊன்றிக் கவனிக்காத, மனம் ஒன்றிக் கவனிக்காத எதுவும் நினைவில் தங்காது. நீங்கள் ஆர்வத்தோடு ஒரு கதைப்புத்தகத்தை வாசிக்கிறீர்கள். அப்போது அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தையுமே ஊன்றிக் கவனிக்கிறீர்கள். அது உங்களது மனத்தில் நன்கு பதிந்து விடும்.

 

brain


 

ஆர்வம் இல்லாமல், ஊன்றிப் படிக்காத விஷயங்கள் நினைவில் தங்குவதில்லை. அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும் கடினம். ஒரு பாடகர் மிக எளிதாகப் பாடுவதற்குக் காரணம், அவர் இசையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பதுதான். அதேபோல ஒரு நல்ல மருத்துவருக்கு நோயாளி நோயைக் கூறியதுமே மருந்து நினைவுக்கு வருகிறது. அதற்குக் காரணம் அவர் தனது மருத்துவப் பணியை நேசிக்கிறார். அதில் ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதுதான்.

 

மற்றொரு விஷயம் நம்பிக்கை. நாம் நினைவாற்றல் உள்ளவர்கள். நம்மால் எதையும் மறக்க முடியாது. எல்லாவற்றையும் நம்மால் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். 


‘எனக்கு இது நினைவிருக்கும்’.


‘எனக்கு அபாரமான நினைவாற்றல் உள்ளது.’


‘இதை எளிதாக நான் நினைவில் வைத்திருக்க முடியும்’


என்று நமக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த நேர்மறை எண்ணம் நமக்குள் நம்பிக்கையை வளர்க்கும்.


மாறாக ‘நான் மறந்து விடுவேன்’ என்றோ,


‘இதை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது’ என்றோ எதிர்மறையாக நினைக்கக்கூடாது. அது நமது நினைவாற்றலை தேய்த்துவிடும்.

 

 


ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதி வைப்பது பலனளிக்காது. நீங்கள் எழுதி வைப்பது உங்களது கையெழுத்தை மேம்படுத்தலாம் அல்லது எழுதும் வேகத்தை அதிகரிக்கலாம். மற்றபடி நினைவாற்றலை அது அதிகரிக்காது.


எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க பேப்பரில் எழுதி வைப்பது, ஒரு வலிமையான நல்ல நினைவாற்றலை வளர்ப்பதற்கான அடிப்படை விஷயங்களுக்கு எதிரானது என்று ஹாரி லோரய்ன் கூறுகிறார்.

 

brain




சில விஷயங்களை நினைவில் வைத்திருக்க சில எளிதான வழிமுறைகளைக் கையாள வேண்டும்...


உதராணமாக நாம் பள்ளியில் படிக்கும் போது வானவில்லில் உள்ள ஏழு நிறங்களை எளிதாக நினைவில் வைத்திருக்க vibgyor என்ற வார்த்தையை ஆசிரியர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
 


இந்த வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் வானவில்லில் உள்ள ஒவ்வொரு நிறத்தைக் குறிக்கும். நாம் இந்த வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். அதன்மூலம் வானவில்லில் உள்ள ஏழு நிறங்களையும் சொல்லி விடலாம்.

 

அடுத்த பகுதி:


நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2

 

 

 


 

 

 

 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.