Skip to main content

முதல்வரின் ’உங்களில் ஒருவன்’ நூலை வரவேற்கிறோம்! - திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை தீர்மானம்

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Chief Minister MK Stalin's 'ungalil oruvan' book Resolution of the Dravida Progressive Creative Council

 

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் 1ஆம் தேதி இரவு, இணையம் வழியாக நடந்தது. பேரவையின் தலைவர் முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. இதில் பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணைத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளரும் வழக்கறிஞருமான பேரவையின் செயலாளர் எம்.எம்.தீன், அரசு வழக்கறிஞரும் எழுத்தாளருமான இணைச்செயலாளர் அன்னக்கொடி, பொருளாளர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், கவிஞர் முல்லை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

1, தமிழகத்தின் இடர் நிலையைக் களைந்து, அனைத்து வகையிலும் நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கும் மாண்பரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை, தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறது.

 

2.தனது வாழ்க்கைப் பயணத்தில் 69-ஆம் வயதில் அடிவைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

3. முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதி வெளியிட்டிருக்கும் ‘உங்களில் ஒருவன்’ நூல், 60 ஆண்டுக்கால தமிழக அரசியல் நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த வரலாற்று ஆவண நூல் என்பதால், இதை வாழ்த்தி வரவேற்பதோடு, நூல் குறித்த ஆய்வரங்குகளை நடத்திப் பரப்புரை செய்வது என்றும் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

 

4. திராவிட வரலாற்றின்  முதன்மைக் கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு, தமிழகத்தின் தலை நகரான சென்னையில் ஒரு மணி மண்டபம் அமைக்குமாறு, தமிழர்களுக்கான ஆட்சி அமைந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசை, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கை அண்மையில் முதல்வரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.  

 

5. திராவிட இயக்கக் கவிஞர்களான சுரதா, பொன்னிவளவன், முடியரசன், கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களுக்கு, சென்னையில் ஒரே இடத்தில் நினைவரங்கம் அமைக்க வேண்டும் என்றும், இத்தகைய திராவிட இயக்கக் கவிஞர்களின் பெயரிலும் விருதுகளை அறிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையும் அண்மையில்  முதல்வரிடம் நேரில் வைக்கப்பட்டிருக்கிறது.

 

6. தமிழக பண்பாட்டின் மாண்புகளும், நம் இன மொழி உணர்வுகளும், வருங்காலத் தலைமுறையினரின் இதயங்களில் விதைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாகும். எனவே, அதற்கு இசைவாக தமிழகத்தின் பாடத் திட்டத்தில், திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசை, இந்த பேரவை  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

மேற்கண்ட தீர்மானங்களோடு, இனமொழி உணர்வுடன் திராவிடச் சிந்தனை கொண்ட படைப்பாளிகள் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.