Skip to main content

திருமணத் தடை, பிரிவினைக்குத் தீர்வு!

Published on 05/02/2021 | Edited on 06/02/2021

னித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பு கணவன்- மனைவி, தாய்- தந்தை, உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக இணைந்து வாழ்வதே. ஒரு குறித்த வயது வரை பெற்றோருடன் வாழும் மனிதன், தன் வாழ்வின் கடைசிநாள்வரை இணைந்து வாழ்வது, வாழவிரும்பவது வாழ்க்கைத் துணையுடன் மட்டுமே. மனிதனின் தனிமை யைத் தவிர்க்க வாழ்க்கைத்துணையால் மட்டுமே முடியும்.

மனித வாழ்வில் மிகக்கொடூரமான அத்தி யாயமென்பது பிரிந்து வாழ்வது மற்றும் தனிமை. வாழ்க்கைத்துணையின் இறப்பு, விவாகரத்து போன்ற காரணங்களால், இனி சேர்ந்தே வாழமுடியாது என்ற நிலை வரும் போது, அடுத்த கட்டத்தை நோக்கி அடி யெடுத்துவைக்கும் சிந்தனை தோன்றும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கும்போது, பிரிவினை மனவேதனையைத் தந்தாலும், செல்போனில் கருத்துப் பரிமாற்றத்தின்மூலம் ஓரளவு நிம்மதி கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி பிரிந்து வாழும்போது ஏற்படும் தனிமை, வாழ்கையை நரகமாக்குகிறது.

வாழ்வின் இன்பமான நாட்களை- நினைவுகளை அசைபோட்டு, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இல்லறச்சிறையில் கைதியாக வாழ்கிறார்கள். மறுபடியும் இணைந்து வாழ்வோமா என்ற கேள்விக் குறியுடன் பலரின் வாழ்க்கை தொடர்கிறது. பல இடங்களில் தம்பதிகள் விவாகரத்தும் கொடுக்காமல், சேர்ந்தும் வாழாமல் இரண்டும் கெட்டான் நிலையிலேயே வாழ்கிறார்கள்.

மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற வீட்டில் வாழ்பவர்கள்கூட பேசிக்கொள்ளாமல், ஆளுக்கொரு அறையில் தனியாக, மனம் ஒட்டாமல் வாழ்கிறார்கள்.

தற்காலத்தில் பணம் சம்பாதிப்பதைவிட ஒருவரின் மனதில் இடம்பிடித்து ஆதர்ன தம்பதியராக வாழ்வது மிகக்கடினமாக இருக் கிறது. தம்பதியரிடையே ஏற்படும் பிரிவினை, தனிமைக்கான காரணம், தீர்வு குறித்த ஜோதிடரீதியான ஆய்வே இந்தக் கட்டுரை.

ஜனனகால ஜாதகத்தில் 2, 7-ஆம் பாவகம், அதிபதிகள், 6, 8-ஆம் அதிபதிகளுடன் சம்பந் தம் பெறும்போது விவாகரத்து ஏற்படும்.

2, 7-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் வக்ர கிரகங்கள் பிரிவினையைத் தரும்.

2, 7-ஆம் பாவகம், அதிபதிகள், 12-ஆம் பாவகம், அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது பிரிவினை ஏற்படுகிறது. லக்ன சுபர் வலுப்பெற்றவர்களுக்கு 12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகங்களின் அந்தர காலங்களில் சுபமாகவோ, அசுபமாகவோ குறுகிய பிரிவினை ஏற்படுகிறது.

12-ஆம் அதிபதி- குறுகியகால தசை நடத்தும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால், பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக்கிறது. நீண்டகாலம் தசை நடத்தும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்கச் செய்கின்றன.

லக்னம் வலிமையிழந்தவர்களில் பலர், வாழ்க்கைத்துணையுடன் சேருவோமா என்ற சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகு கிறார்கள்.

2, 7-ல் நிற்கும் 12-ஆம் அதிபதி திருமணத்தையே நடத்தித்தராமல், வாழ்க்கையை வெறுக்கச் வக்கிறது. 7-ஆம் இடம் என்பது களத்திரத்தை மட்டுமல்லாமல், நண்பரையும் குறிக்குமிடம் என்பதால், இத்தகையவர்களுக்கு சிறப்பான நண்பர்களும் அமைய மாட்டார்கள். இவர்களிடம் அன்பாக நடப் பவர்களைவிட முதுகில்குத்தி துரோகம் செய்பவர்களே அதிகம்.

12-ஆம் இடம் ஸ்திர லக்னமாக இருப் பவர்கள் 2, 7, 12-ஆம் பாவகம் மற்றும் அதிபதி களுடன் சம்பந்தம் பெற்றால் பிரிவினை நிரந்தரம்.

mm

சுக்கிரன் இல்லற வாழ்வுக் குரியவர். சுக்கிரன் ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கை யைப் பற்றியும் சொல்கிறவர். சுக்கிரன் களத்திரகாரகன்- அதாவது வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பவர். சுக்கிரன் ஜாத கக்கட்டத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஆணுடைய ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம்பெற்று, 2, 7, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்தால் காலதாமதத் திருமணம் தரும் அல்லது திருமணமே நடக்காது அல்லது தன் திருமணத்தை தானே காலம் தாழ்த்துவார்கள்.

செவ்வாய் ஆண்களுக்கு வீரியத்தையும், மாங்கல்ய பாக்கியத்தையும் தருபவர். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்று, 2, 7, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்தால் காலதாமதத் திருமணம் தரும் அல்லது திருமணமே நடக்காது அல்லது தன் திருமணத்தை தானே காலம் தாழ்த்துவார்கள்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய், ராகு சேர்ந்தும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்ந்துமிருந்தால், மனப்போராட்டத்தால் பிரிவினை ஏற்படுகிறது.

பெண் ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால், கணவரால் எந்த சுகமும் கிடைக்கப்பெறுவதில்லை.

ஆண் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும், பெண் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பில்லை. இந்த அமைப்பிருந்தால், திருமணத்திற்குப் பின் தொழில், வேலையில் பாதிப்பு ஏற்பட்டு, ஜாதகருக்கு கையில் பணம் தங்காது. சுபமங்களப் பொருட்கள் சேராது. குடும்பத்தில் பிரிவினை ஏற்படும். சரியான தூக்கம் வராது.

6, 7-ஆம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் திருமணத்தில் தடை ஏற்படும். அதிர்ஷ்டவசமாக திருமணம் நடந்தாலும், எத்தனை திருமணம் நடந்தாலும் அத்தனையும் தோல்வியில் முடியும்.

இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

இது ஆண் ஜாதகம்: 27-11- 1979-ஆம் ஆண்டு இரவு 11.15 மணிக்குப் பிறந்தவர்.

லக்னாதிபதி சூரியன் கேந்திரம் ஏறியுள்ளார். 5-ஆம் அதிபதி குரு லக்னத்தில், 9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்னத்தில் என மேலோட்டமாக சுபப் பலன்களை மிகுதியாக அனுபவிப்பவர் என்று கூறலாம். குருவுக்கும் சுக்கிரனுக்கும் சம்பந்தம் இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் கூறலாம். இதுவரை இவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. எந்த திருமணப் பரிகாரத்தாலும் பலனில்லையென்று கூறினார். அவருக்குத் திருமணம் நடைபெறாத காரணத்தை முதலில் அறியலாம்.

2-ஆம் அதிபதி புதன் வக்ரம். 7-ஆம் அதிபதி சனி 2-ல் நின்றாலும், 2-ஆமிடத்தில் நிற்கும் சனி பகவான் குடும்ப வாழ்வில் தடை, தாமதத்தைத் தருவார். 7-ஆமிடத்தில் சந்திரன், கேது சேர்க்கை. 12-ஆம் அதிபதி சந்திரன் 7-ல் கேதுவுடன் உள்ளார். பிறப் பிலேயே திருமண அமைப்பு குறைவு. 34 வயது வரை வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ் சேர்த்து விட்டுத் திருமணம் செய்யலாம் என்ற ஆர்வத் தில், திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை.

சனி தசை முடிந்து புதன் தசை வந்த வுடன், 2-ஆம் அதிபதி தசை என்பதால், திருமண ஆசை வந்து முயற்சிசெய்தபோது, போதிய பொருளாதார வசதி இருந்தும் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. சுக்கிரன் கேது சாரம் என்பதால், திருமண வாய்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டது. 5-ஆம் அதிபதி குருவையும், 9-ஆம் அதிபதி செவ்வாயையும் சேரவிடாமல் ராகு பிரிக்கிறது. அதாவது பாக்கியப் பலனும் பூர்வபுண்ணியமும் பலன் தராத நிலை. இவருக்குரிய பரிகாரமுறை வழங்கி, திருமணத்திற்குப் பின் பிரிவினை ஏற்படாமலிருக்கவும் ஆலோசனை கூறப்பட்டது. தை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்குப்பிறகு, பிரிந்து தனிமை யில் வாழும் தம்பதியினரும், திருமணமே நடக்காமல் தனிமையில் வாழ்பவர்களும் உங்களின் 5-ஆம் அதிபதியின் தெய்வத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் வழிபடவேண்டும்.

5-ஆம் அதிபதி:

சூரியன்- சிவ வழிபாடு

சந்திரன்- அம்மன் வழிபாடு

செவ்வாய்- முருகன் வழிபாடு

புதன்- பெருமாள் வழிபாடு

குரு- சித்தர்கள் வழிபாடு

சுக்கிரன்- மகாலட்சுமி வழிபாடு

சனி- காவல் தெய்வம்

ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னம்- ஆன்மாவையும், சந்திரன்- உடலையும் குறிக்கும். சந்திரனானது ஏதாவது ராசியில், ஒரு ஜென்ம நட்சத்திரப் பாதத்தில் இருக்கும். அதுவே பிறந்த நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர். கர்மவினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மை, தீமைகளுக்குக் காரணமானவர்.

இந்த ஜென்ம நட்சத்திர நாளில் இஷ்டதெய்வ வழிபாடு செய்தால் நலமுண்டாகும்.

ஜென்ம நட்சத்திர பூஜை முடித்து, ஏழை- எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், பித்ருக்கள் ஆசியால் தடைகள் அகலும்.

செல்: 98652 20406



 

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.