Skip to main content

"நீண்ட நாள் வாழ இந்த சைவத் திருமுறை படியுங்கள்" - நாஞ்சில் சம்பத் பகிரும் திருமூலரின் திருமந்திர மகிமை

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருமந்திரம் குறித்தும் அதை எழுதிய திருமூலர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

"சித்தர்கள் குறித்து தற்போது மிகப்பெரிய விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது. மொத்தம் 18 சித்தர்கள் இருந்ததாக சித்தர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். சித்தர் ஜீவசமாதியான இடம் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் 10 நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டால் நெஞ்சில் நம்பிக்கையும் கண்களில் ஒளியும் பிறக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். இந்தச் சித்தர்களுக்கெல்லாம் ஒருவர் தலைவராக இருந்தார் என்றால் அவர்தான் திருமந்திரத்தை தந்த திருமூலர். கற்பனை உலகில் சஞ்சரித்துக் கிடந்த மக்களை நிஜ உலகத்திற்கு அழைத்து வந்தவர் அவர். வாழ்க்கை என்பது மாயம்  என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வரையறுத்துச் சொன்னவர் திருமூலர். 

 

ஒரு யானை சிற்பம் இருக்கிறது. அதைப் பார்த்த ஒரு குழந்தை, அப்பா யானை... அம்மா யானை என்று கூறி அஞ்சி நடுங்குகிறது. ஆனால், அந்த யானை சிற்பத்தை ஒரு சிற்பி பார்க்கும்போது அதை அவர் சிற்பமாகவே பார்க்கிறார். ஒரு சிற்பத்தை சிற்பி பார்ப்பதற்கும் குழந்தை பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. இதை,

"மரத்தை மறைத்தது மாமதயானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே"

என்று திருமூலர் பாடினார். இன்பத்தமிழில் எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும், இன்பத்தமிழில் எத்தனையோ காப்பியங்கள் இருந்தாலும் சொல்லுகிற சொல்லை கல்வெட்டுபோல சொல்கிறவர் திருமூலர். அதனால்தான் யுகங்கள் தோறும் திருமூலர் பேசப்படுகிறார். 

 

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று இன்றைக்கு மனிதன் ஆசைப்படுகிறான். ஆரோக்கியமாக இருப்பதற்கு எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். தான் தேடிய செல்வத்தின் பெரும்பகுதியைக் கொட்டிச்செலவழித்து தன்னுடைய உடலைப் பேணுவதற்காக அவன் ஏங்குகிறான். இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்குச் செல்கிறார்கள், விளையாட்டு மைதானத்திற்குச் சென்று பல்வேறு விதமான பயிற்சிகளைச் செய்கிறார்கள். இதற்கான அகரம் எழுதியவர் திருமூலர்தான். அவர்தான் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார். உன்னுடைய உயிர் உன்னுடைய உடம்பை பொறுத்தது என்று சமகால அறிவியலை அன்றே சொன்னார். 

 

இன்றைக்கு வழிபாட்டின் பெயரால் கருத்து வேறுபாடுகளும் காழ்ப்புணர்ச்சியும் காலூன்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார் திருமூலர். ரத்தம் சிந்தி சாதிக்க முடியாத புரட்சியை ஒரு மந்திரத்தில் சொல்லி இம்மண்ணை பொன்னாக்கியவர் அவர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதை அண்ணா சொல்லியதாகப் பலர் நினைக்கிறார்கள். அதைச் சொல்லியவர் திருமூலர். திருமந்திரத்தில் உள்ள மாணிக்கச் சொல்தான் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது. திருமூலரின் திருமந்திரத்தை பின்பற்ற ஆரம்பித்தோமேயானால் உடம்பும் வளரும் உயிரும் வளரும். நீண்ட நாள் வாழ்வதற்கு காயகல்பத்தை தேடிப்போகாமல், திருமந்திரத்தைத் தேடிப்போங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்".

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.