Skip to main content

இல்லற இன்பம் இல்லாத கணவன்-மனைவி!  

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

dddd

 

ஜோதிட முறையில் ஆண் - பெண் ஜாதகத்திற்கென தனித்தனியே பலன் கூறுவது கிடையாது. இருவர் ஜாதகத்திலும் இதில் கூறப்பட்டுள்ளதுபோல் கிரகங்கள் இருந்தால், இங்கு கூறப்படும் பலன்கள் இருவருக்கும் சரியாகப் பொருந்தும்.

 

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில், லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் செவ்வாய் இருந்தால் முன்கோபம், கலக குணம், பிறரைத் துன்புறுத்தி மகிழும் சுபாவம், அகங்காரம், ஆணவம் கொண்டவள் மனைவியாக அமைவாள்.

 

7-ஆவது ராசியில் சனி இருந்தால் சோம்பல்தனம், மந்தமான புத்தி, செயல், வயது முதிர்ந்த தோற்றம் கொண்ட பெண் மனைவியாக அமைவாள். பெண் ஜாதகமாக இருந்தால் இதுபோன்று கணவன் அமைவான்.

 

7-ஆவது ராசியில் ராகு இருந்தால் பொய், திருட்டுப் புத்தி, சூழ்ச்சி, வஞ்சக குணம், எதையும் ரகசியமாகச் செய்தல், வேடதாரி, ஏமாற்றும் குணம், மாயமந்திரச் செயல்களில் நம்பிக்கை, சுயநலம்கொண்ட வயது முதிர்ந்த தோற்றமுடைய பெண் மனைவியாக அமைவாள்.

 

7-ஆவது ராசியில் கேது இருந்தால் எந்தச் செயலிலும் ஈடுபாடின்மை, ஆர்வமின்மை, எப்போதும் எதையோ இழந்ததுபோல் விரக்தி, பணம், பொருள் சம்பந்தமான தகராறு, கருத்து வேறுபாடு கொண்ட பெண் மனைவியாக அமைவாள். கடவுள் வழிபாடு, பூஜை, விரதங்களைக் கடைப்பிடித்து வாழ்வாள். தாம்பத்திய சுகம் குறையும். வயது முதிர்ந்த தோற்றம், நேர்மாறான குணம் கொண்டவள்.

 

ஒரு ஆணின் ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசியில், லக்னத்திற்கு 6-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால் அதிக செலவு செய்பவள், கணவனுடன் கருத்து வேறுபாடு கொள்பவள், பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாத நிலையை உருவாக்கும் பெண் மனைவியாக அமைவாள். திருமண வாழ்க்கை சிறப்பாக இராது.

 

7-ஆவது ராசியில் லக்னத்திற்கு 12-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால், குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவு, குழப்பம் செய்பவள், நோயாளியாக இருக்கும் பெண் மனைவியாக அமைவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 2-ஆவது ராசியில் இருந்தால் மனைவி குடும்ப விஷயங்களில் அநாவசியமாக தலையிட்டு, தனக்குத்தானே அவமானங்களைத் தேடிக்கொள்வாள். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவள், மனநோய், உடல்நோயுடைய பெண்ணை மணம்புரிவான்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 3-ஆவது ராசியில் இருந்தால் திருமணத்திற்குப் பின்பு ஜாதகருக்கு கண்டங்கள், கஷ்டங்கள், நோய் பாதிப்பு உண்டாகும்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 4-ஆவது ராசியில் இருந்தால் மனைவி, ஜாதகனின் தகப்பனாரை - அதாவது மாமனாரை அவமானப்படுத்தித் துன்புறுத்துவாள். தகப்பனையும் மகனையும் பிரித்துவிடுவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 5-ஆவது ராசியில் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு ஜாதகன் தான் செய்துவந்த தொழில், உத்தியோகத்தை இழக்க நேரிடும்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 6-ஆவது ராசியில் இருந்தால் இவன் ஆசைகள் நிறைவேறாதபடி, ஆசைப்பட்டதை அனுபவிக்கவிடாமல் இவன் மனைவியே தடைசெய்து, எதிராகச் செயல்படுவாள். மனைவியால் வம்பு, வழக்குகள் உண்டாகும். ஜாதகனின் மூத்த சகோதர, சகோதரிகளை, நண்பர்களை அவமானப்படுத்தி உறவைப் பிரித்துவிடுவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் ஆட்சி பெற்றிருந்தால் மனைவி படுக்கையறையில் ஒத்துழைக்க மறுப்பாள். முரண்டுபிடிப்பாள். ஜாதகனின் தூக்கத்தைக் கெடுப்பாள். இதனால் கணவன் வேறு உறவைத் தேடுவான். பெண் ஜாதகத்தில் இதுபோல் இருந்தால் கணவனுக்கு இந்த குணமிருக்கும்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 8-ஆவது ராசியில் இருந்தால் மனைவியால் இவனுக்குப் பலவித அவமானங்கள் உண்டாகும். மனைவி மிரட்டுவாள். பல தொல்லைகளைத் தந்து துன்புறுத்துவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 9-ஆவது ராசியில் இருந்தால் மனைவியின் தலையீட்டால் செய்யும் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் தடை ஏற்படும். தொழில் முடங்கலாம். மனைவியும் மனைவி வீட்டாரும் ஜாதகனின் குடும்பத்தாரை மிரட்டுவார்கள். கேவலமாகப் பேசி அவமானப்படுத்துவார்கள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 10-ஆவது ராசியில் இருந்தால் மனைவி ஜாதகனின் இளைய சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்தி, கேவலமாகப் பேசித் துன்புறுத்துவாள். சகோதர உறவைத் துண்டித்துவிடுவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 11-ஆவது ராசியில் இருந்தால் மனைவி ஜாதகனின் தாயாரை - அதாவது மாமியாரைக் கேவலமாகப் பேசித் துன்புறுத்துவாள். தாய், மகன் உறவைப் பிரித்துவிடுவாள்.

 

7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 12-ஆவது ராசியில் இருந்தால் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்படுவாள். மருத்துவச் செலவு, தண்டச் செலவு அதிகமாக இருக்கும். பெற்ற பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்துவாள்.

 

ஆண் - பெண் திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும்போது சுத்த ஜாதகம், பாவ ஜாதகம், தோஷ ஜாதகம் என்று எதுவும் கிடையாது. இந்த பூமியில் பிறக்கும் எல்லாருக்கும் பாவமும் உண்டு, புண்ணியமும் உண்டு. மேலும் ராகு, சனி, செவ்வாய், கேது தோஷம் உள்ளது; இதேபோன்று கிரக அமைப்பு உள்ளவர்களுக்குத்தான் திருமணம் செய்யவேண்டும்' என்று கூறுகிறார்கள்.

 

ஆனால் இருவரின் பாவக்கணக்கும் ஒன்று சேர்ந்து இருமடங்காகி இல்லற வாழ்க்கையில் சிரமம் அடைகிறார்கள்.

 

பொருத்தம் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவள் மணம்புரியும் ஆணின் ஜாதகம் யோக அமைப்புள்ளதாகவும், ஆண் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவர் மணம் புரியும் பெண்ணின் ஜாதகம் யோக அமைப்பு உடையதாகவும் இருக்க வேண்டும். இதுபோன்று திருமணம் செய்தால், இருவர் வாழ்க்கையும் சந்தோஷமானதாக அமைந்துவிடும்.

 

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி 
(ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

 

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.