Skip to main content

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Daniel balaji temple

 

வில்லனாக பல படங்களில் தன்னுடைய நடிப்பால் மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி, தன்னுடைய ஆன்மீகத் தேடலால் தற்போது ஒரு கோவில் கட்டியுள்ளார். ஆவடியில் அவர் கட்டியுள்ள ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குறித்து அவரே நம்மிடம் பேசுகிறார்...

 

கோவில் கட்டுவதற்கு முன்பு கோவில்கள் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். முறைப்படி ஆராய்ச்சிகள் செய்த பிறகு கட்டப்பட்டது தான் இந்தக் கோவில். கோவில்களில் சவுண்டு எனர்ஜி மிக முக்கியமானது. அது இந்தக் கோவிலில் உண்டு. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் இறைவனிடம் வேண்டுதல்கள் இல்லை. சிறுவயதிலிருந்தே எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கடவுளிடம் நான் கேட்டதில்லை. எப்போதும் கடவுள் என் அருகில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் அதிகபட்ச வேண்டுதலாக இருந்திருக்கிறது. 

 

கடவுளுக்கு என்னுடைய நன்றிக்கடன் தான் இந்தக் கோவில். எனக்கு இதுவரை கிடைத்த உயரங்கள் எதுவும் நான் எதிர்பார்த்தவை அல்ல. நான் எது செய்தாலும் அந்தப் பணியின் மீது மட்டும் தான் என்னுடைய கவனம் இருக்கும். பெயர் வாங்க வேண்டும் என்பதில் கவனம் இருக்காது. ஆனால் நல்ல பெயர் கிடைத்துவிடும். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டித்தந்த வீடு தான் இந்தக் கோவில். பொதுவாகவே எனக்கு இருக்கும் ரசனை தான் இந்தக் கோவிலின் புற வடிவமைப்பிலும் நான் ஈடுபட்டதற்கான காரணம்.

 

மனதார நாம் நம்பும் விஷயங்கள் நிச்சயம் நடக்கும். அனைத்தையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வேண்டுதலுக்கென்று தனியாக எந்த முறையும் இல்லை. உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். எதிலும் நம்பிக்கை மிகவும் அவசியம். அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் தவறில்லை. கோவிலுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.

 

நாம் கோவிலுக்குச் செல்லும்போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் சற்று நேரம் அங்கு அமைதியாக இருந்துவிட்டு வந்தாலே பல நன்மைகள் நடக்கும். கோவிலுக்கு நிம்மதியுடன் வந்து நிம்மதியாகச் செல்லுங்கள். மனம் அமைதியடையும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

 


 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.