Skip to main content

கரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைத் தாண்டியது!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,269 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 12,428, ஸ்பெயினில் 9,053, அமெரிக்காவில் 4,056, பிரான்சில் 3,523 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 

world wide coronavirus strength increased


இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 133 பேர் குணமடைந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்