Skip to main content

நாஜி சதி முதல் கரோனா வரை பலவற்றை வென்று நூறு வயதை எட்டிய பெண்...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Joy Andrew

 

 

நாஜி சதி, விமான விபத்து, புற்றுநோய், கரோனா எனப் பல்வேறு இடர்பாடுகளை தன் வாழ்வில் எதிர்கொண்ட ஜாய் ஆண்ட்ரூ என்ற பிரிட்டிஷ் பெண்மணி 100 வயதை எட்டினார்.

 

1920-ம் ஆண்டு லண்டனில் பிறந்த ஜாய் ஆண்ட்ரூ, இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் துணை விமானப்படையில் பணியாற்றினார். இவர் தன்னுடைய வாழ்நாளில் தன்னைக் கொலை செய்வதற்காக நாஜி மேற்கொண்ட சதி, பயணித்த விமானம் சந்தித்த விபத்து, புற்றுநோய் பாதிப்பு, சமீபத்திய கரோனா பாதிப்பு என அனைத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

 

தன்னுடைய 100 வயதை எட்டியுள்ள ஜாய் ஆண்ட்ரூ குறித்து அவரது மகளான 57 வயது நிரம்பிய மைக்கேல் ஆண்ட்ரூ பேசுகையில், "எனது அம்மா அற்புதமான மற்றும் வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இந்த 100 வயது என்பது அவருடைய சாதனைகளில் ஒன்றாக தற்போது இணைந்துள்ளது" எனக் கூறினார்.

 

நாஜி சதி குறித்துப் பேசிய மைக்கேல் ஆண்ட்ரூ, "ஜெர்மனியில் என் அம்மாவின் கார் டிரைவராக ஒருவர் பணியாற்றினார். ஒருநாள் பயணத்தின்போது வேண்டுமென்று காரை ஒரு இடத்தில் மோதச் செய்து அம்மாவை கொலை செய்ய நினைத்தார். அந்தத் தழும்பு கூட அவரது முகத்தில் இன்னும் இருக்கும். இதனையடுத்து, அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். பின் அவர் நாசி எனத் தெரியவந்தது" என்றார்.

 

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார் ஜாய் ஆண்ட்ரூ. இவர் பயணித்த விமானம் எரிபொருள் குறைபாடு காரணமாக விபத்தைச் சந்திக்க அதில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார். 1970-ம் ஆண்டு மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஜாய் ஆண்ட்ரூ, தற்போது அதிலிருந்தும் பூரண குணமடைந்துள்ளார். 

 

இதுபோல, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து பலமுறை மீண்டு, 100 வயதை எட்டிய ஜாய் ஆண்ட்ரூவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.