Skip to main content

விப்ரோ நிறுவனத்தின் இலாபம் 38% அதிகரிப்பு...!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ. 2,484 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 38% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 1,803 கோடி. 

 

wipro

 

அதேசமயம் அந்நிறுவனத்தின் வருமானம் ரூ. 13,824 கோடியிலிருந்து ரூ. 15,038 கோடியாக உயர்ந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

விப்ரோ நிறுவனம் ரூ. 10,500 கோடிகளுக்கு பங்குகளை திரும்பப் பெறப்போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த பங்குள் ஒவ்வொன்றும் தலா ரூ. 325 என்று வாங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு ஊதியம் பிடிப்பு... செக் வைத்த விப்ரோ

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

 Salary deduction for employees... Wipro


பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ பணித்திறனை எட்டாத ஊழியர்களின் ஊதியத்தில் செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதியவிகித்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

 

A, B வரிசையில் உள்ள புதிய ஊழியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகிதத்தில் 30 சதவிகிதத்தை பிடிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து ஊதிய பிடித்தம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் C வரிசையில் உள்ள மூத்த ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகித திட்டத்தைத் திரும்பப் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது 'விப்ரோ'. அந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாய் 15 விழுக்காடு குறைந்த நிலையில் இந்த நடவடிக்கையை 'விப்ரோ' எடுத்துள்ளது

 

 

Next Story

விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

இந்தியாவில் முன்னணி ஐ.டி  நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் விப்ரோ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை பங்கு சந்தைக்கு அசிம் பிரேம்ஜி அனுப்பியுள்ள அறிக்கையில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. விப்ரோ தலைவருக்கு தற்போது 53 வயதாகிறது. குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, உலகின் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோ நிறுவனத்தை உருவாக்கியவர்.

 

 

rishad premji

 

 

இவரின் தொழில் துறையின் திறமையை பாராட்டி இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு, பத்மபூஷண் விருதும், 2011 ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதும் வழங்கி கவுரவப்படுத்தியது. இது தவிர இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன. வணிகத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எக்னாமிக் டைம்ஸ் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நாளிதழ்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பங்கு சந்தையில் இந்தியா சார்பில் முதன் முறையாக கால் பதித்தவர். உலக பணக்காரர்கள் வரிசையில் அசிம் பிரேம்ஜியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

wipro company

 

 

2001 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார். விப்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து அசிம் பிரேம்ஜி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து நிர்வாக குழு இயக்குனர்களில் ஒருவராகவும், நிறுவனராகவும் இருப்பார் என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது. அசிம் பிரேம்ஜி ஓய்வு பெறுவதை அடுத்து ஜூன் 31-ம் தேதி முதல், அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் தலைவர் பதவியை வகிப்பார் என்றும், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அபிதாலி நீமுச்வாலா நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.