Skip to main content

வரப்போகும் தலைமாற்று அறுவை சிகிச்சை; மிராக்கல் கொடுத்த 'பிரைன் பிரிட்ஜ்'

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
upcoming head transplant; Viral video

மனித உடல் உறுப்புகளின் திடீர் செயலிழப்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உறுப்பு செயல் இழப்புகளைத் தடுப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதயம் முதல் கல்லீரல் வரை, கண்கள் முதல் சிறுநீரகம் வரை என உடல் உறுப்புகள் மாற்றப்படுவது இப்பொழுது சர்வ சாதாரணம் முறையாக மாறி வருகிறது. குறிப்பாக அண்மை காலமாகவே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு தேவைப்படுவோருக்கு மாற்றி பொருத்தப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருங்காலத்தில் தலையையே மாற்றி வைத்துக் கொள்ளும் அறுவை சிகிச்சை முறை வரப்போவதாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணையவாசிகளால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான 'பிரைன் பிரிட்ஜ்' என்ற நிறுவனம் வீடியோ ஒன்றை கடந்த மே 22ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது மருத்துவ உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் மனிதனின் உடலில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் அடையாளம் காணப்படும் முக்கிய அமைப்பாக இருப்பது முகமும் தலையும்தான். அதனை மாற்றியமைக்கும் சிகிச்சைக்கான அந்த வீடியோதான் இந்த சிலாகிப்புக்குக் காரணம்.

'பிரைன் பிரிட்ஜ்' நிறுவனம் தொடர்ந்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ரோபோக்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை எப்படி சாத்தியம் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. ஆட்டோனோமஸ் சர்ச்சிக்கல் ரோபோஸ் வகை ரோபோக்கள் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் தலையை மற்றொரு மனிதனுக்கு மாற்றும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நரம்பியல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கேன்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ உலகில் இதுவும் ஒரு மைல் கல்லாக அமையுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் மருத்துவ உலகினர். இந்த ஆய்வு ஒருவேளை வெற்றிகரமாக முடிந்தால் இன்னும் எட்டு வருடத்தில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வரும் என  'பிரைன்  பிரிட்ஜ்'  நிறுவனத்தின் தலைமைத் தெரிவித்துள்ளது மருத்துவ உலகிற்கு மிராக்கல் கொடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சர்ச்சை வீடியோ; ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகர்ஜுனா!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Nagarjuna apologized to the fan

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நாகர்ஜுனா அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

'அதீத போதை...' - சாலையை ஆக்கிரமிக்கும் போதை ஆசாமிகள்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 'Extreme intoxication...'-Drug addicts occupying the road

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 'Extreme intoxication...'-Drug addicts occupying the road

இந்தச் சம்பவத்திற்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதை ஆசாமிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்தப் பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர், மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்த சேலையூர் காவல் நிலைய இரவு நேரக் காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது காவலரை காலால் தாக்கி, போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

 'Extreme intoxication...'-Drug addicts occupying the road

அதேபோல் சேலத்தில் போதை ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் வெயில் கொளுத்தும் வேளையில் சிறிதும் சலனமின்றி நடு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் படுக்கை விரித்து படுத்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற ஒருவர் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவரை அகற்ற முயலாமல் செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.